நாடு விடுதலை அடைவதற்கு முன்பும், பின்பும் ஏராளமான சாதிய மோதல்கள் நிகழ்ந்தன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. தென் மாவட்டங்களில் மட்டுமல்ல வட மாவட்டங் களிலும் பல மோதல்கள் நடந்துள்ளன. கிழக்கு மாவட்டங்களில் பெரிய மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒப்பு நோக்கின் சாதிய மோதல்கள் குறைவு. இதற்கு காரணம் இம்மாவட்டங்களில் 1940-50 களில் துவங்கி பல ஆண்டுகள் நடைபெற்ற கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான வர்க்கப் போராட்டங்களாகும். இந்த வர்க்கப் போராட்டங்கள் கூலி உயர்வு, குத்தகை உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மட்டுமல்லாது, தலித்துகள் மீதான கொத்தடிமை உள்ளிட்டு சமூக ஒடுக்குமுறை களுக்கு எதிரான போராட்டங்களாகவும் இருந்தன. இதனால், கீழ்த்தஞ்சை மாவட்ட விவ சாயத் தொழிலாளர்களுக்கென தனி கூலிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கூடவே, பல நூற்றுக் கணக்கான கிராமங்களில் தீண்டாமையை உள்ள டக்கிய கொத்தடிமை முறை நிலச்சுவான்தார் களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. மேற்கு மாவட்டங்களை பொறுத்தவரை அங்குள்ள தலித்துகளில் கணிசமானவர்கள் அருந்ததியர்கள். இம்மாவட்டங்களில் இன்றளவும் கொடூரமான சாதிய ஒடுக்குமுறை கள் தலைவிரித்து ஆடுகின்றன. இதனால் இம்மாவட்டங்களில் ஆங்காங்கே சாதிய மோதல்கள் நிகழ்கின்றன. 1995-97 ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட சாதிய மோதல்களை தொடர்ந்து தமிழக அரசு - உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.லட்சுமிகாந்தன்பாரதி, சென்னை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை தலைவர் பேராசிரியர் பி.சுந்தரம் ஆகிய மூன்று பேரை கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை 1997 ஜூலை 6 அன்று நியமனம் செய்தது.
“தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாதிய வன்முறைகளின் காரணங்களை கண்டறி வது; இனி வரும் எதிர்காலத்தில் இத்தகைய மோதல்கள் - வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற் கான வழிமுறைகளை உருவாக்குவது. மற்றும் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடு மைகள் தடுப்பு) சட்டம் ஆகிய தீண்டாமை ஒழிப்பு சட்டங்கள் தமிழகத்தில் சரியாக அமல்படுத்தப் படுகிறதா?, இவை அமல்படுத்தும்போது ஏற்படு கின்ற நடைமுறைச் சிக்கல்களை தவிர்ப்பதற் கான வழிமுறைகள் எவை” என்பது இந்த உயர் மட்டக் குழுவின் பணியாக வரையறுக்கப்பட்டி ருந்தது. இந்த ஆய்வு என்பது மதுரை, தேனி, விருது நகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் நடந்த சாதிய மோதல்களோடு தொடர்புடையதாகும். 1995-97 காலகட்டத்தில் இம்மாவட்டங்களில் 672 சாதிய வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இவற்றில் 95 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 67 பேர் தலித் மக்கள் ஆவர். காவல்துறையினர் 24 துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். இதில் 49 பேர் மரணமடைந்தனர். பொது சொத்து மற்றும் தனியார் சொத்துக்களின் சேதம் என்பது 109 கோடியாகும். இந்த உயர்மட்டக்குழு மேற்படி 6 மாவட்டங் களில் நடத்திய ஆய்வில் பல உண்மைகள் வெளி வந்தன. சாதிய மோதல்களுக்கு அடிப்படைக் காரணங்களாக கீழ்க்கண்ட அம்சங்களை இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்தியது.
தீண்டா மைக் கொடுமைகள், பல நூற்றாண்டுகளாக தலித் மக்களை ஒதுக்கி வைத்திருப்பது, பொது ஆதாரங்களான தண்ணீர், கோவில்கள், சுடுகாடு, இடுகாடு போன்றவற்றை பயன்படுத்து வதற்கு பல இடங்களில் அவர்களை அனுமதிக் காமை, ஒதுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரை சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கான வளர்ச்சித் திட்டத்தில் துவங்கி, உள்ளூர் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசியல் உறுதி இல்லாததால் அதற் குள்ளே சாதி அமைப்புகளும் தனிநபர்களும் நுழைவதற்கு இடம் தருதல், தொழில் வளர்ச்சி இல்லாமை, அதனால் வேலை வாய்ப்பு இல்லாமை ஆகியவை இப்பகுதிகளில் சமூகப் பதட்டங்கள் ஏற்படுவதற்கு அமைப்பு ரீதியான காரணங்களாக இருக்கின்றன” என் பதை இந்த ஆய்வுக்குழு வெளிப்படுத்தியது. பல்வேறு சாதிகளுக்கிடையே மோதல்கள் நடப்பது என்பது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது. இதனால் பாரம்பரியமான போட்டி மனப்பான்மையும் வெறுப்புணர்வும் நீண்ட காலமாக பல்வேறு சாதிகளில் இருந்து வருகிறது. இதனை மிக கவனமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது இந்த ஆய்வுக்குழு. இரண்டு குறிப்பிட்ட சாதிகளுக்கிடையேதான் பிரச்சனை என்று சொல்ல முடியாது. வேறு வேறு சாதிகள், வேறுவேறு இடங்களில் மோதிக் கொள்கின்றன. ஆழமாகி வேறோடிப் போய் உள்ள சாதி அமைப்பு முறை மேலும் மேலும் ஆழமாகச் செல்கிறது. ஒவ்வொரு சாதியும் தனது சாதி ஆட்களை திரட்டி அரசியல் மற்றும் சமூக அந்தஸ்து பெற முயல்கிறது.
இந்தப் போக்கில் சாதிகள் ஒன்றுக்கொன்று பகைமையாக மாறிவிடுகின்றன என்கிறது உயர்மட்டக்குழு. உடலுழைப்பு செய்யும் மக்களின் ஒரு பகுதி யினர் தாழ்ந்த சாதிகளாக நடத்தப்படுவதும், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் வாழ அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதும், குடிநீர் ஆதாரங்கள், பள்ளிகள், கோவில் கள், பொதுப் பாதைகள், சுடுகாடுகள் ஆகிய வற்றை அவர்கள் அனுபவிக்க விடாமல் தடுக்கப்படுவதும், அவர்கள் தீண்டத்தகாத வர்கள் என முத்திரை குத்தப்படுவதும் அவர் களிடையே படிப்படியான அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துவதை ஆய்வுக் குழு அம்பலப்படுத்துகிறது. ஒவ்வொரு செயல் பாட்டிலும் அவர்கள் மற்ற பகுதி மக்களிட மிருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவர் களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டு, இதிலி ருந்து அவர்கள் மீளவும் இந்த சமூக அமைப்பு முறையை மாற்றவும் முயற்சி செய்யும் போதெல்லாம் உடனடியாக ஆதிக்க சக்தி களிடமிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது. இந் நிலை மோதல்களுக்கு இட்டுச் செல்கிறது. மற்ற சாதிகளிடமிருந்து தனிமைப் படுத்தப்படுதல் என்பது தலித் மக்களின் அடிப்படைப் பிரச்சனையாகும். பல்வேறு நல மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தலித் மக்கள் மேலே வர உதவினாலும் இந்த தனிமைப்படுத்தப்படுதலை இல்லாமல் செய்யவில்லை. முரண்பாடாக இந்த வளர்ச்சித் திட்டங்கள் தலித் மக்கள் தனிமைப் படுத்தப்படுவதை உடைத்து சமூகத்தின் மற்ற மக்களோடு தலித் மக்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கும்போது அவற்றிற்கு சாதி ஆதிக்க பிரிவினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பு கிறது. இவை மோதல்களுக்கு இட்டுச் செல்கின்றன.
தீண்டாமை பல இடங்களில் இன்னமும் வெளிப்படையாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள இளைய தலைமுறையினருக்கு எரிச்சலை தந்து கொண்டே இருக்கிறது. இது சாதிய வன்முறைக்கான காரணங்களில் முக்கிய மான ஒன்றாகும். இதோடு கள்ளச்சாரய வியா பாரிகளும், கந்துவட்டிக்காரர்களும் தங்களது பண பலம், ஆள் பலத்தை கொண்டு சாதிய மோதல்களை தூண்டிவிடுகின்றனர். வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது சாதிய மோதல்களுக்கு முக்கியமான காரண மாய் இருப்பதாக தெரிவிக்கிறது ஆய்வுக் குழு. 1997 ஏப்ரல் - ஜூனில் வறட்சி காரண மாக விவசாய வேலைகள் எதுவும் நடக்காமல் இருந்தபோது சாதிய சக்திகள் வேலையில் லாத இளைஞர்களை பயன்படுத்திக் கொண்ட னர். ஆனால், 1997 அக்டோபர் - நவம்பரில் மழை பெய்து விவசாய வேலைகள் மீண்டும் துவங்கியபோது இளைஞர்கள் அத்தகைய சாதி வெறி நடவடிக்கைகளில் ஈடுபட நேரம் இல்லாமல் இருந்ததால் கலவர நிலைமை சற்று தணிந்தது. வானம் பார்த்த பூமியான பிற்படுத்தப்பட்ட தென் மாவட்டங் களில் நல்ல வருமானம் தரக்கூடிய தொழிற் சாலைகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாமல் இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு தரக்கூடிய பெரும் தொழிற்சாலைகள் இல்லை. அடுத்து, தீண்டாமை ஒழிப்புச் சட்டங் களான வன்கொடுமை தடுப்புச் சட்டம் (1989), குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களை அரசு நிர்வாகம் உறுதி யாக செயல்படுத்தவில்லை.
தீண்டாமை, வன்கொடுமைக் குற்றங்கள் அதிகரித்து வந்தபோதிலும் குற்றவாளிகள் தண்டிக்கப் படும் விகிதாச்சாரம் மிகக் குறைவாக உள்ளது (30 சதவிகிதம்). சாதிய சக்திகளின் குரோதங் களை எதிர்கொள்வதற்கு எளிமையான தீர்வு இருக்க முடியாது. சிக்கலான பல சவால் களை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். இதோடு, சமூக சீர்திருத்த நடவடிக்கைகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிலம், விவசாய கூலி உயர்வு உட்பட பொருளாதார உரிமை கள், தேர்தல் சீர்திருத்தங்கள், கல்வி முறை யில் மாற்றம் என பலதரப்பட்ட அணுகு முறைகளை ஏக காலத்தில் அரசியல் உறுதி யோடு நிறைவேற்ற வேண்டும். எய்ட்ஸ் நோய் கிருமிக்கு எதிராக செய்யப் பட்டு வரும் நடவடிக்கை போல தீண்டாமை ஒழிப்பிற்கான பிரச்சாரத்தை வலுவாக மேற் கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுக்கி றது ஆய்வுக்குழு. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மனித சங்கிலி, மாணவர் ஊர்வலம், சமபந்தி போன்ற வடிவங்களையும் பயன் படுத்த வேண்டுமென சிபாரிசு செய்கிறது உயர் மட்டக்குழு. சில நிர்வாக நடவடிக்கைகளை யும் சிபாரிசு செய்துள்ளது. அதாவது கிராமங் களில் அமைதிக் குழுக்களை உருவாக்கு வது, மதுரையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து சாதிய மோதல்கள் பற்றிய வழக்கு களின் விசாரணையை வேகப்படுத்துவது போன்ற அம்சங்களை இக்குழு குறிப்பிடுகிறது. இவ்வாறு பல உறுதியான மற்றும் பல நல்ல ஆலோசனைகளை உயர்மட்டக்குழு வெளிப்படுத்தியிருந்தாலும் சில அம்சங்க ளில் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மையே.
சாதிய முறைக்கும், விவசாய உற வுக்கும் உள்ள தொடர்பை கணக்கிலெடுத்து கணிசமான தலித் மக்களை உள்ளடக்கிய விவசாய தொழிலாளர்களுக்கு வலுவான நில சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் பெரும் நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலம் எடுத்து அவர்களுக்கு நிலம் வழங்குவது முக்கியமான தேவையாகும். மேலும், காவல்துறையில் போதுமான தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர் தேர்வாவதை உறுதிப் படுத்துவது அவசியம். இந்த இரு அம்சங் களுமே மிக முக்கியமானதாகும். நில சீர்திருத்த சட்டங்கள் மூலம் தலித் மக்களுக்கு நிலம் வழங்குவதால் தீண்டாமை - வன்கொடுமை மற்றும் சாதிய மோதல்கள் குறையும் என்பதற்கு இந்தியாவில் நல்ல உதா ரணங்கள் உண்டு. குறிப்பாக கம்யூனிஸ்ட்டு கள் வலுவாக உள்ள மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா மாநிலங்களில் தலித் மக்களுக்கு பரவலாக நிலம் வழங்கப்பட்டிருப்பதால் அவர்களின் அன்றாட வாழ்விற்கு உயர்சாதி யினரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதனால் தீண்டாமை, வன் கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாதிய சக்திகளை உறுதியாக எதிர்கொண்டு பரவ லாக அதிலிருந்து விடுபட்டுள்ளனர். இம்மாநி லங்களில் தீண்டாமை, வன்கொடுமை, சாதிய மோதல்கள் குறைவு என்பதற்கு தேவையான புள்ளி விபரங்கள் உள்ளன. இம்மாநிலங் களில் நீண்ட காலத்திற்கு முன்பே வலுவான சமூக சீர்திருத்த இயங்கங்கள் நடை பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக கம்யூ னிஸ்ட்டுகள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உறுதியாக போராடி வந்துள்ளனர்.
கூடவே தீண்டாமை, வன்கொடுமை ஒழிப்புச் சட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் தலைமை யிலான மாநில அரசுகள் வலுவாக அமல் படுத்தியுள்ளன. கூலிப் போராட்டத்துடன் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போரா டியதால் கீழ்த்தஞ்சையின் பரவலான பகுதி களில் தீண்டாமை கொடுமைகள், வன்கொடு மைகள் குறைவு - சாதிய மோதல்களும் குறைவு. மோகன் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை 1997 ஆம் ஆண்டு நவம்பர் 23லேயே தமிழக அரசு சட்டமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் சிபாரி சுகள் தென்மாவட்டங்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பரவலான மாவட்டங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையிலேயே அமைந் துள்ளன. ஆயினும், இந்த அறிக்கையின் பெரு வாரியான சிபாரிசுகள் இன்றுவரை அமல் படுத்தப்படாததது வருந்தத் தக்கது. காவல் துறை நிர்வாகத்தை சீரமைப்பது, முன் அனுமதி இல்லாமல் சாதி - சமய தலை வர்களுக்கு சிலை வைக்கத் தடை, வன்முறை யைத் தூண்டும் போஸ்டர்கள் - சுவர் விளம் பரங்கள் ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக் கைகள், தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு போன்ற உத்தர வுகள் மட்டும் உடனடியாக வெளியிடப் பட்டன. இப்போதும் தீண்டாமை, வன்கொடுமை தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலைமை தமிழகத்தின் பல மாவட்டங்களில் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. எனவே, மோகன் குழுவின் சிபாரிசுகள் அனைத்தும் உறுதியான முறையில் அமலாக்க இப்போதாவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதோடு, இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல ஆலோசனைகளையும் அமல்படுத்த முன்வர வேண்டும். இந்த கடமைகளை தமிழக அரசு நிறைவேற்ற முன்வந்தால் சாதிய ஒடுக்கு முறைகள் - மோதல்கள் குறைவதற்கும், தவிர்க்கப்படுவதற்கும் தமிழகத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன என்பதில் ஐயமில்லை.