tamilnadu

‘சோசலிச, மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகளை

‘சோசலிச, மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகளை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு  கடும் சாடல்

நாட்டின் சுதந்திரத்திற்கு எந்தப் பங்கும் ஆற்றாத இயக்கம் ஆர்எஸ்எஸ்

புதுதில்லி ஜூன் 27 - “அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழு மியங்கள் எக்காரணம் கொண்டும் மாற்றப் படக்கூடாது, என்றும்; இதை மாற்றுவதற்காக மேற் கொள்ளப்படும் முயற்சிகள் உறுதியாக எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும்” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப் புரையில் உள்ள வாசகங்களான ‘சோசலிச’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள் நீக்கப் பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பொதுச்செயலாளர் முன்வைத்துள்ள முன்மொழி வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.  இந்த முன்மொழிவானது அரசிய லமைப்புச் சட்டத்தை சீர்குலைத்திடும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நீண்டகால நோக்கத்தையும், அதன் இந்துத்துவா திட்டத்தைப் பின்பற்றி, ‘இந்தியாவை ஓர் இந்துராஷ்டிரமாக மாற்ற வேண்டும்’ என்கிற நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறது. பகத்சிங் - தோழர்களின் தியாகத்தால் விளைந்த அரசியலமைப்புச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டம், நமது வர லாற்றுச் சிறப்புமிக்க காலனித்துவ எதிர்ப்பு மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் அபிலாஷைகளை உள்ளடக்கியதாகும். முகப்பு ரையில் கண்டுள்ள ‘சோசலிசம்’ மற்றும் ‘மதச்சார் பின்மை’ ஆகியவை சேர்க்கப்பட்டிருப்பது தன்னிச் சையானவை அல்ல. தியாகி பகத்சிங் மற்றும் அவ ருடைய தோழர்கள் எதற்காகப் போராடி தங்கள் உயி ரைத் தியாகம் செய்தார்களோ அதை பிரதிபலிப்ப தாகும். அவர்களின் லட்சியங்கள் அரசியலமை ப்புச் ட்டத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பொதிந்துள் ளன. மேலும் இந்த வார்த்தைகளை இடம்பெறச் செய்தது அந்த மரபை உறுதிப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ்-சின் இழிமுயற்சியை சிபிஎம் எதிர்த்து முறியடிக்கும் சுதந்திர இயக்கத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்எஸ்எஸ், இப்போது இந்த அடிப் படைக் கொள்கைகளை அகற்ற வேண்டும் என்று வாதிடுவது பாசாங்குத் தனத்தின் உச்சமாகும். நமது தியாகிகளால் போற்றப்படும் மதிப்புகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்பது அதன் பிற்போக்குத்தனமான, மக்களை மத  ரீதியாகப் பிளவுபடுத்திடும் அவர்களின் சித்தாந்தத் தைக் காட்டிக் கொடுக்கிறது. நமது அரசியலமைப்பு சட்டத்தில் பொதிந்துள்ள அடிப்படை விழுமியங் களை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் எந்த வொரு முயற்சியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபட எதிர்க்கும். ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் இத்தகைய அனைத்து முயற்சிகளுக்கு எதிராக விழிப்புடன் இருந்து மக்கள் இவர்களின் இழிமுயற்சிகளை எதிர்த்திட முன்வர வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கை யில் கூறியுள்ளது. (ந.நி.)