tamilnadu

img

நாயக்கநேரி ஊராட்சித் தலைவராக பட்டியலின பெண் பதவியேற்க முடியவில்லை

சென்னை,செப்.13- நாயக்கநேரி ஊராட்சித் தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பெண்ணால்  பதவியேற்க முடிய வில்லை. இப்பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என்று தமிழ் நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்  தலைவர் த.செல்லக்கண்ணு, மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கநேரி (தனி) ஊராட்சித் தலைவராக 2021 இல் நடைபெற்ற தேர்தலில் இந்துமதி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான சான்றிதழையும்  பெற்றுள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும்   இன்று வரை அவருக்கு பதவிப்பிர மாணம் செய்யப்படவில்லை. இதற்கு உள்ளூர் சாதி இந்துக்களின் எதிர்ப்பும், அரசு நிர்வாகத்தின் அலட்சியமான அணுகுமுறையும் தான் காரணமாகும்.

நாயக்கநேரி தனி ஊராட்சி என அறிவிக்கப்பட்டதால் மொத்தம் 9 வார்டு களில் இரண்டில்தான் தேர்தல் புறக் கணிப்பை மீறி வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். போட்டி இருந்த இரண்டு வார்டுகளில் மட்டும் சாதிய சக்திகள் வேட்பாளர்களை நிறுத்தி, மீறி நின்றவர் களை தோல்வியடையச் செய்துள்ளனர். அவ்வாறு மீறி போட்டி போட்டவர்கள் மிரட்டப் பட்டு  ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  நாயக்கநேரி பஞ்சாயத்தில் பட்டியல்  சாதி மக்கள் தொகை மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில் எப்படி அது பட்டியல் சாதியினருக்கான பஞ்சாயத்தாக ஒதுக்கீடு செய்யப்படலாம் என்ற வாதமே  சாதி இந்துக்களுடையது. சுழற்சி முறை யில் ஒதுக்கீடு அமைவதை எடுத்துரைத்து உறுதியோடு அணுக வேண்டிய அரசு நிர்வாகம் பதவிப்பிரமாணம் செய்வதை வேண்டுமென்றே தாமதித்து நீதிமன்ற வழக்குக்கு செல்வதற்கான கால அவகா சத்தை சாதி இந்துக்களுக்கு தந்ததில் துவங்கிய பாரபட்சம் இன்று வரை நீடிக் கிறது. நீதிமன்றத்தில் பதவிப் பிரமா ணத்திற்கு தடையேதும் பிறப்பிக்கப்படாத சூழலிலும் அரசு நிர்வாகம் வழக்கை காரணம் காட்டி பதவிப் பிரமாணத்தை இழுத்தடித்து வந்துள்ளது. 

இந்துமதியின் கணவர் பிற்பட்ட சாதியைச் சார்ந்தவர். அவருடைய உற வினர் குடும்பங்கள் மற்றும் பழங்குடி மக்கள் குடும்பங்கள் தேர்தலில் இந்து மதிக்கு ஆதரவாக இருந்த காரணத் தால் ஊர் விலக்கத்திற்கு ஆளாக்கப்பட்டு ள்ளனர். அவர்கள் பால் வியாபாரம் செய்ய முடியவில்லை. நிலங்களில் விவ சாயம் செய்ய முடியவில்லை. அந்த 21 குடும்பங்களில் பலர் அந்த ஊரில் குடி யிருக்க முடியாமல் மாடுகளை விற்று விட்டு வெவ்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இப்போதும் அங்கே குடியிருக்கும் ஓரிரு குடும்பங்கள் மிரட்ட லுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். இந்துமதி - பாண்டியன் தம்பதியரும் ஊருக் குள் குடியிருக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர்களது இரண்டு குழந் தைகளின் கல்வி கூட பாதிக்கப்பட்டுள் ளது. இவை எல்லாம் அரசு நிர்வாகத்திற்கு  தெரியாதது அல்ல.

இந்துமதியும் கண வரும்  மாவட்ட ஆட்சியர், பி.டி.ஓ  உள்ளிட்ட  அரசு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள னர். மே 1 அன்று நடந்த கிராம சபை கூட்ட த்திலும் கலந்து கொண்டு பேசியுள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டிய அதிகாரிகள் சாதிய சக்திகளின் அச்சுறுத்தலுக்கு துணை போயுள்ளனர்.  இந்நிலையில் இந்துமதி, கணவர் பாண்டியன், ஊர் விலக்கத்திற்கு ஆளான பாண்டியனின் உறவினர் ஆகியோரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன், பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், துணைப் பொதுச் செயலாளர்கள் பா.சுகந்தி, க.சுவாமிநாதன், பொருளா ளர் மோகனா, வேலூர் மாவட்டத் தலைவர் கள் காத்தவராயன், வி.குபேந்திரன், ரவி, காசி,மணிமாறன், (மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி), ஓம் பிரகாஷ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), வழக்கறிஞர்கள் மருதன், சிவா, பாலகுமரன் மற்றும் கேச வன் (சி.ஐ.டி.யு) உள்ளிட்டவர்கள் சந்தித்து பிரச்சனைகளைக் கேட்டறிந்தனர்.  பின் னர் மாவட்ட  அதிகாரிகளை சந்தித்து உட னடியாக இந்துமதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வற்புறுத்தினர். விரைவில் தீர்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஆகவே உடனடியாக இந்துமதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவேண் டும்.  தீண்டாமையை கடைப்பிடிக்கும் நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்ட த்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்துமதி குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சாதிய சக்திகளுக்கு துணை போய் தவறு இழைத்த அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.