tamilnadu

உலகச் செய்திகள்

தங்கள் பத்தாண்டு தேசிய பாதுகாப்பு உத்தியை பரிசீலனை செய்ய வியட்நாம் அரசு முடிவு செய்திருக்கிறது. புதிய சூழலுக்கு ஏற்றவாறு திட்டத்தை உருவாக்க இது குறித்து உருவாக்கப் பட்டுள்ள நிலைக்குழுவின் முதல் கூட்டம் அந்நாட்டின் தலைநகர் ஹனோயில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஜனாதிபதி குயென் சுவான் புக் தலைமை தாங்கினார். உள்நாட்டிலும், உலக அளவிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை நிலைக்குழு உறுப்பினர்கள் பலரும் சுட்டிக்காட்டிப் பேசினர்.

அமெரிக்காவின் தன்னிச்சையான தடைகளை மீறி ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி இல்லாமல் போடப்படும் தடைகள் ஈரானின் ஏற்றுமதியைப் பாதிக்கவே செய்தது. ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளுடனான புதிய ஏற்றுமதி உடன்பாடுகள் பலன் அளிக்கத் துவங்கியுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 12 லட்சம் பீப்பாய் எண்ணெய் ஒவ்வொரு நாளும் ஈரானிலிருந்து ஏற்றுமதி ஆகியிருக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் விலைகள் எகிறியுள்ளன. அடுத்த மாதத்தில் அமெரிக்காவின் தலைமை வங்கியின் வட்டி விகித அறிவிப்பில் அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு வாடகை, மின்சாரம் மற்றும் உணவு ஆகியவற்றிற் கான கட்டணம் அதிகரித்துள்ளன. நடுத்தரமற்றும் ஏழை மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். அமெரிக்காவின் பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகப் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.