ஊரக வேலைத்திட்ட ஊதிய பாக்கி ரூ.2999 கோடியை விடுவித்தது ஒன்றிய அரசு! விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
சென்னை, மே 3 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில், வேலை செய்த பயனாளிகளுக்கு ஆறு மாதங்களாக வழங்காமல் இருந்த சம்பளப் பாக்கியை ஒன்றிய பாஜக அரசு விடுவித்துள்ளது. இது, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒன்றுபட்ட கிராமப்புற மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த முழு வெற்றி என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் கடந்த 2024 நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் வேலை செய்த பயனா ளிகளுக்கான கூலி தொகை ரூ.4034 கோடியை வழங்காமல் திட்டத்தின் பய னாளிகளை ஒன்றிய பாஜக அரசு ஏமாற்றி வஞ்சித்து வந்தது. இதைக் கண்டித்து, விவசாயத் தொழிலாளர் சங்கம் தமிழ்நாடு முழு வதும் ஆயிரக்கணக்கான கிராமங்களி லும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களி லும் பல்வேறு கட்டப் போராட்டங்களை கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சி யாக நடத்தி வந்தது. தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு, சம்பள பாக்கியைப் பெற்றுத் தர தொடர்ச்சியாக முதல மைச்சர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரி களை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வி.சிவதாசன், சு.வெங்கடேசன், ஆர். சச்சிதானந்தம் உள்ளிட்டோரும் ஊரக வேலைத் திட்டத்தில் சம்பள பாக்கியை விடுவிக்கக் கோரி தொடர்ச்சி யாக நாடாளுமன்றத்தில் பேசி வலி யுறுத்தினர். கடந்த பிப்ரவரி 12 அன்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகைமாலி, சம்பள பாக்கி கேட்டு வலியுறுத்தி பேசினார். அதனடிப்படையில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக் கும் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரி களுக்கு, சம்பளப் பாக்கிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்று வலி யுறுத்தி கடிதங்களை எழுதினார். சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பி னருமான எம்.சின்னதுரை சம்பள பாக்கிக் காக காத்திருக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் துயரங்கள் குறித்து தொடர்ந்து சட்டமன்றத்தில் எடுத்துரைத்து, சம்பள பாக்கியைப் பெற்றுத் தர தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். மேலும் மார்ச் 16 அன்று தமிழ்நாடு அரசின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை யில், நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி உள்ளிட்டோர் ஒன்றிய நிதி அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து வலியுறுத்தினர். இந்நிலையில் தற்போது ஒன்றிய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளின் ஊதிய பாக்கி ரூ.2999 கோடியை விடுவித் துள்ளது. ஆறு மாதங்களாக சம்பளத்தை பாக்கி வைத்து விட்டு, தற்போது முழுமையாக விடுவிக்காமல் மேலும் ரூ.1035 கோடியை பாக்கி வைத்து உள்ளது. இதற்கு விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையான கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறது. வேலை செய்து காத்திருக்கும் ஊரக வேலை திட்டப் பயனாளிகளின் ஊதிய பாக்கியை, ஒன்றிய பாஜக அரசு முழுமையாக விடுவிக்க வேண்டும். ஊரக வேலைத் திட்ட விதிகளின் படி, 15 நாட்களை கடந்து வழங்கப்படும் ஊதியத்திற்கு காலதாமத கட்டணம் வழங்கிட வேண்டும். ஆறு மாத காலம் சம்பளத்தை வழங்காமல் ஒன்றிய அரசு இழுத்தடித்து வந்துள்ளது. இப்படி கால தாமதமாக வழங்கப் படும் ஊதியத்திற்கு கட்டாயமாக, முறையாக கணக்கிட்டு திட்டத்தின் பய னாளிகளுக்கு வட்டியுடன் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கடந்த காலங் களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. ஊரக வேலைத் திட்டத்தின் சட்ட விதி மற்றும் 1946 கூலி பட்டுவாடா சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், ஒன்றிய பாஜக அரசு வட்டியுடன் சேர்த்து மீதமிருக்கும் கூலி பாக்கியை யும் உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் சம்பளப் பாக்கியைப் பெற்றுத் தருவதற்காக முயற்சி எடுத்த அனைவருக்கும் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.