tamilnadu

வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

சென்னை,பிப்.12- தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ஆம்தேதி நடைபெறு கிறது. இதையொட்டி வார்டு தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதிப்பட்டியல் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களையும் ஒதுக்கியது. அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளுக்கு அந்தந்த கட்சி சின்னமும், மற்றவர்களுக்கு சுயேச்சை சின்னங்களையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது. சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததால் ஒவ்வொரு வேட் பாளர்களும் சின்னங்களை முன்னிறுத்தி ஓட்டு கேட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 2,670 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக 5,794 வாக்குச் சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே கட்சி பிரதிநிதிகள் முன்னிலை யில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை  பாதுகாப்பாக உதவி தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணி  நடைபெற்றது. சென்னையில் 24 இடங்களில்  இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு வேட்பாளரின் பெயர் அகரவரிசைப்படி அச்சிடப்பட்டு இருந்ததால் அதற்கு நேராக சின்னங்கள் இடம் பெற்றி ருந்தன. ஒவ்வொரு வேட்பாளரின் பெயர்,  சின்னம் மின்னணு எந்திரத்தில் எத்தனையா வது இடத்தில் அமைந்துள்ளது என்பதை  ஒவ்வொரு வேட்பாளர்களும் உறுதிபடுத்திக் கொண்டனர்.