திண்டுக்கல், மே 24- தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் வசிப்போருக்கு இலவச வீட்டுமனை, இலவச பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஒன்றியத் திற்குட்பட்ட வில்வா தம்பட்டி, பாறைப்பட்டி, தும் பலபட்டி, தொப்பம்பட்டி, சின்ன வேலம்பட்டி, திரு வண்டாபுரம், சண்முக வலசு, கே. வேலூர் மற்றும் கீரனூர் பேரூராட்சி பகுதி களில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை, இலவச பட்டா வழங்கக் கோரி தொப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சி யின் ஒன்றியச் செயலாளர் என்.கனகு தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் வி.ராஜ மாணிக்கம், எம்.ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கே.சின்னத்துரை, எம். பழனிச்சாமி, ஆர்.இளையபாரதி, கே.எம்.இஸ்மாயில் கே.சக்திவேல், கே.முருகேஷ் மற்றும் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தையடுத்து பழனி மண்டல துணை வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில், கிராம வாரி யாக இலவச வீட்டு மனை மற்றும் இலவச பட்டா வழங்குவதற்கான நடவ டிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் கோரிக்கை களின் அடிப்படையில் புளி யம்பட்டி, தும்பலப்பட்டி, வாகரை, சண்முக வலசு ஆகிய ஊர்களில் இலவச வீட்டு மனை, இலவச பட்டா வழங்க வருவாய்த் துறையின் ஆலோசனை யும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. பேச்சுவார்த்தை யின் முடிவுகளை போராட் டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மண்டல துணை வட்டாட்சியர் விளக்கிக்கூறினார். (நநி)