டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது!
சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை, ஜூன் 16- டாஸ்மாக் கடைக்கு எதிரான அமைதியான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது என்று தெரி வித்துள்ள சென்னை உயர் நீதி மன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப் பினர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட் டதாகவும், போக்குவரத்துக்கு இடை யூறாக இருந்ததாகவும் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த முரு கானந்தம், மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிதம்பரம் முதலாவது நடுவர் நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகானந்தம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசா ரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நடைபெற்றது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறி ஞர் ஏ.சுரேஷ் சக்திமுருகன் ஆஜ ராகி, “உள்ளூர் பகுதி மக்களின் நலன் கருதியே போராட்டம் அமைதியான முறையில் நடந்ததாகவும், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் டாஸ் மாக் கடை அமைந்துள்ளதாகவும், போராட்டத்தில் எந்த அசம்பாவித மும் நடைபெறாத நிலையில் யாரும் புகார் கொடுக்காத நிலையில் போலீ சாரே தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும்” வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வினோத்குமார், “சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் எந்த அனுமதியும் பெறப் படாமல் போராட்டம் நடைபெற்ற தாகவும், சட்டம் ஒழுங்கை பாது காக்கவே வழக்குப் பதிவு செய்யப் பட்டதாகவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, “குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் மதுபான கடைகள் ஏற்ப டுத்தும் சமூகப் பிரச்சனை குறித்து பொதுமக்கள், குறிப்பாக அப்பகுதி பெண்களுக்கு நியாயமான கவலை களை எழுப்பும் என்று தெரிவித்தார். இது போன்ற சந்தர்ப்பங்களில் அமை தியான போராட்டங்களை குற்றச் செயலாக கருத முடியாது” என்றும் குறிப்பிட்டார். ஆட்சியில் உள்ள அரசியல் கட்சி கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை யைக் குறைப்பதாக வாக்குறுதி களை அளித்தாலும் உண்மையில் இந்தக் கடைகளை மூடுவதற்கு பதி லாக, வேறு இடத்திற்கு மாற்றப்படுவ தால் முக்கிய பிரச்சனை தீர்க்கப் படாமல் உள்ளது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். இதுபோன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் ஒவ் வொரு தனிநபருக்கும் எதிராக காவல் துறை குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்தால், அது ஜனநாயக உரி மைக்கு எதிரானதாகும் என்றும், இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந் தால், மாநிலம் முழுவதும் இதே போன்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண்கள் மீதும் வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். போராட்டங்கள் அமைதியாக வும் வன்முறையற்றதாகவும் தொடர்ந் தால், பொதுமக்கள் தங்கள் கருத்து களை வெளிப்படுத்தவும், அரசிட மிருந்து உரிமைகளைக் கேட்கவும் முடியும் என்றும் தெரிவித்து, சிதம்பரம் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தர விட்டுள்ளார்.