கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழையும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கிறது. மனிதர்கள், கால்நடைகள் உயிரிழப்பு, விவசா யத்திலும், தொழில்களிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு கணிப்புகளையும், அரசின் மதிப்பீடு களையும் கடந்தவை. பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் கடந்த நான்கு நாட்களாக நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தனது அனுபவத்தை தீக்கதிருடன் பகிர்ந்து கொண்டார்.
வெள்ளம் வடிந்தாலும் வற்றாது கண்ணீர்
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெருமழை வெள்ளத் தால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யும்போது வெறுமனே வீடுகளுக் குள் வெள்ளம் புகுந்தது என்று கடந்து செல்ல முடியாது. அல்லது இடிந்து விட்டது என்று மட்டும் பார்க்க முடி யாது. பல வீடுகளுக்குள் 2 நாட்க ளுக்கு மேல் வெள்ளம் தேங்கி நின்றது. அந்த வீடுகள் நிலைத்து நிற்குமா என்கிற கேள்வி எழுகிறது. ஈரத்தில் ஊறிப்போன சுவர் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது. உதாரண மாக தூத்துக்குடி எம்விடி பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததை பார்க்கலாம். வீடுகளுக்குள் தண்ணீர் வந்து விட்டது. அது வடிந்தால் பிரச்சனை முடிந்தது என்று இருந்து விட முடியாது. உடுத்தும் துணி முதல் டி வி, மிக்சி, குளர்சாதன பெட்டி போன்ற மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டன. பண்ட பாத்திரங்கள் ,உண வுப் பொருட்கள் வீணாகி உள்ளன. வீடுகளுக்குள் வெள்ளம் அடித்துக் கொண்டுவந்த கழிவுகளை அகற்று வதும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி யுள்ளது. குழந்தைகளின் புத்தகங்கள் வெள்ளத்தில் சேதமடைந்து விட்டன. பாதிப்புகளை சரி செய்து மீளும் வழி தெரியாமல் நிர்க்கதியாக நிற்கிறார்கள். சாதாரணமாக அன்றாடம் கூலி வேலைக்கும், கடை வேலைகளுக்கும் செல்வோருக்கு வருவாய் இல்லாதது கவலை அளிப்பதாக உள்ளது. பாதிப்பிலிருந்து மீண்டும் மீளாமலும் வேலைக்கு செல்ல தயாராகி இருப் பார்கள். ஆனால் வேலை கொடுப்ப வர்கள் தயாராகி இருக்க மாட்டார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு வருவாய் இல்லாமல் அவதிப்படு வார்கள் என்பது தெரியாது. வேலைக்கு செல்வோருக்கு இருசக்கர வாகனம் தவிர்க்க முடியாதது. தண்ணீரில் மூழ்கி கிடந்த வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்து உடனடியாக சரி செய்ய முடியாமல் அவதிப்படுகிறார்கள். மோட்டார் பொருத்திய சரக்கு வாகனம், தள்ளுவண்டிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இது தான் அவர்களது வாழ்வாதாரம்.
மணல் மேடான நிலங்கள்
அனைத்து பகுதிகளுக்கும் போக முடியவில்லை. முன்னீர்பள்ளம், புதுக்கிராமம் போன்ற மாநகரை ஒட்டிய சில பகுதிகளுக்கு சென்றோம். வாழை மற்றும் இதர பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்து விட்டன. சில இடங்க ளில் ஒரு அடிக்கும் கீழ் பள்ளமாகி மண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளது. பல இடங்கள் மண் திட்டுக ளாகிவிட்டன. இவற்றை சீரமைக்க பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும். சீரமைத்தால்தான் அடுத்த கட்ட பணிகளை செய்ய முடியும். ஏற்க னவே பலர் பணம் வட்டிக்கு வாங்கித் தான் விவசாயம் செய்துள்ளனர். அது இப்போது பெரும் நெருக்கடியாக மாறும். விவசாய சேதத்தை கணக்கி டும்போது வெறும் நெல், வாழை. சாகு படிகள் அழிந்துவிட்டன என்று மட்டும் பார்க்கக் கூடாது. அதைத்தாண்டி நிலத்தில் குவிந்திருக்கும் மண் அல்லது பள்ளத்தை சீரமைப்பதையும் இணைத்து மதிப்பீடு செய்ய வேண்டும். முந்தைய கடனில் இருந்து மீட்கவும், வட்டியில்லா கடன் வழங்கவும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் பொறுப்பு
வியாபாரிகளும், சிறு குறு தொழில் நிறுவனங்களும் சந்தித்துள்ள இழப்பை புரிந்து கொள்ள சிந்து பூந்துறையை குறிப்பிடலாம். அங்கு 6 முதல் எட்டு அடிவரை தண்ணீர் நிரம்பியது. மளிகை வியாபாரம் உட்பட நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. அவை அனைத்தும் தண்ணீ ரில் மூழ்கி பொருட்கள் நாசமாகி விட்டன. அவற்றை திரும்பவும் பயன் படுத்த முடியாது. மின்னணு, மின்சா ரம், ஹார்டுவேர்ஸ், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் நாள் கணக்கில் மூழ்கி கிடந்தன. இதுபோன்ற கடைகளில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்கள்தான் விற்பனை செய்யப் படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியாக லாபத்தின் ஒரு பகுதியை பல்வேறு சமூகப்பணிக ளுக்கு செலவிடுகின்றன. நிறுவன லாபத்தின் ஊற்றுக்கண் அவர்களது டீலர்கள்தான். எனவே டீலர்களை பாதுகாக்கும் பொறுப்பு அந்த நிறுவ னங்களுக்கு உள்ளது. பொருட்க ளுக்கான காப்பீட்டு பிரிமியத் தொகை அதிகம் என்பதால் பெரும்பாலான டீலர்கள் காப்பீடு செய்திருக்க மாட்டார் கள். சில நிறுவனங்கள் டீலர்களுக்கு புதிய அட்டைப் பெட்டிகளை தந்து பொருட்களை பழுது நீக்கி புதிய பொ ருள்போல் விற்கச் சொல்கிறார்கள். இது நுகர்வோரின் நம்பகத்தன்மையை பாதிக்கும் செயலாகும். எனவே, அந்தந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் விற்பனையாளர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தர அரசு முன்வர வேண்டும். வங்கிகளில் பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்தும் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். வட்டி தள்ளு படி, ஜிஎஸ்டியில் குறிப்பிட்ட காலத்து க்கு விலக்கு போன்ற நிவாரண நட வடிக்கைகளை ஒன்றிய அரசு மேற் கொள்ள வேண்டும். புதிய கடன்களை வழங்க வேண்டும். சிறு குறு தொ ழில்கள் மற்றும் வணிக நிறுவனங்க ளின் பாதிப்பு குறித்து எம்எஸ்எம்இ, வணிகவரித்துறை போன்ற அமைப்பு கள் முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
மனநல ஆலோசனை
ஆடு மாடுகள், கோழிகள், நாய்கள், பூனைகள் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளன. வெள்ளம் வடிந்தபிறகு மருத்துவ ரீதியான பிரச்சனைகளை உருவாக்கும். இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு தாய் பெருமழைக்கு பிறகு லேசாக மழை பெய்தால்கூட தன் குழந்தை அழத் தொடங்கி விடுவதாக கூறினார். பள்ளி குழந்தைகளுக்கும், பெரியவர்க ளுக்கும்கூட கவுன்சிலிங்குக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இணைப்பு பாலமான மக்கள்
அரசால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்தான். ஆனால், வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிக ளில் உணவின்றி ஒரு பகுதி மக்கள் பரிதவித்தனர். இந்த பக்கம் சோறு இருந்தது. அரசு அதிகாரிகள் படகில் கூட சென்று அவர்களுக்கு உதவ முடியாமல் தவித்தனர். உணவுக்காக கையேந்தியவர்களுக்கும் அரசுக்கும் இணைப்பு பாலமாக மற்றொரு பகுதி உள்ளூர் மக்கள் மனிதாபிமா னத்துடன் செயல்பட்டதை பார்க்க முடிந்தது. பேரிடர் மீட்பும் நிவாரணமும் அரசிடமிருந்து கிடைப்பது மட்டும் போதாது. அனைவரும் கரம்கோர்த்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டும்.