tamilnadu

img

கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி

கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தில் ஆதிக்க சக்திகளால் கொலை செய்யப்பட்ட தோழர் வீ.கோவிந்தராஜின் 42 ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதியில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி உரையாற்றினார். இந்நிகழ்வில், கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியக்குழு சார்பில் முதற்கட்ட நிதியாக ரூ.4,62,432-ஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் ஆகியோர் நாகைமாலி எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் ஆகியோரிடம் வழங்கினர்.