tamilnadu

மறுமலர்ச்சி யுகம் துவங்கி விட்டது என்பதை மக்களின் நம்பிக்கையாக மாற்றிக் காட்டுங்கள்!

சென்னை, நவ. 16 - இலங்கை ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள- அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இடதுசாரிப் பாதையில் இலங்கையின் பொ ருளாதார மீட்சிக்கும், போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக- அந்த வாழ்த்துச் செய்தி யில் கூறியுள்ளது. இதுதொடர்பாக விடுத் துள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் கூறியிருப்பதாவது:

இடதுசாரிக் கூட்டணியின் வரலாற்று வெற்றி

இலங்கையில் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வர லாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 159 இடங்களை கைப்பற்றியும், 68.63 லட்சம் வாக்குகளை பெற்றும் சாதனை படைத்துள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்பிக்கை வைத்த அனைத்து இலங்கை மக்கள்

பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மலையக தமிழர்கள், இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதிகள் என இலங்கையின் அனை த்துப் பகுதிகளிலும் கணிசமான இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன கட்சித் தலைவர் அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்ற நிலை யில், தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்றுள்ளது.

அமைதி, சமூக நல்லிணக்க விருப்பத்தின் வெளிப்பாடு

கடுமையான பொருளாதார நெருக்கடி யில் சிக்கியுள்ள இலங்கையில் அனைத்துப் பகுதி மக்களும் அமைதியையும், சமூக நல்லி ணக்கத்தையுமே விரும்புகின்றனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. அனைத்துப்பகுதி மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள், தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அவர்களிடம் திரும்ப வும் ஒப்படைக்கப்படும் என்று திஸாநாயக்க அளித்த வாக்குறுதி தமிழ் மக்களின் நம்பிக் கையை பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்க!

கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடப் பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை இடது சாரி பாதையில் மீட்சிப் பெறச் செய்யவும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்ச னைக்கு தீர்வு காணவும் இந்திய, இலங்கை அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். ‘இலங்கையில் மறுமலர்ச்சி யுகம் துவங்கி விட்டது’ என்ற திஸாநாயக்கவின் நம்பிக்கை இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் நம்பிக்கையாக மாற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப் பிட்டுள்ளார்.