திண்டுக்கல், நவ.28- 25- ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் மலைவேடன் பழங்குடி மக்களுக்கு இனச் சான்று வழங்காமல் இழுத்தடிக்கும் வருவாய்த்துறை அதி காரிகளைக் கண்டித்து திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திரு ப்புப் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு, ஆயக்குடி, வேடசந்தூர் ஒன்றியம் உள்ளிட்ட பல பகுதிகளில் மலைவேடன் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இனச்சான்று கடந்த 25 ஆண்டுகளாக வழங்கப்பட வில்லை. இவர்களுக்கு இனச் சான்று வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்தது. அதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு சான்றிதழ் வழங்க உத்தர விட்டனர். மாநில கூர்நோக்கு குழுவும் மலைவேடன் இனச்சான்று, அறியப்பட்ட நபர்களின் ரத்த வழி மற்றும் மரபு சார் உறவினர்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. மலை வேடன் சமூகத்தினரை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 1976-இன் படி பட்டிய லிடப்பட்ட பழங்குடியினராக அங்கீகா ரம் செய்து குடியரசுத் தலைவரால் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
ஆனாலும் கூட, இன்னும் விசாரணை என்ற பெயரில் சான்றிதழ் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சியர், கோட்டாட்சியர் உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சான்றிதழ் கிடைக்கும் வரை காத்திருப்புப் போராட்டம் துவங்கியது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு தலை மை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார். திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி, விவசாயி கள் சங்க மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், மலைவாழ் மக்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் இரா.சரவணன், தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் பி.கந்தசாமி, மாநிலச்செயலாளர் பி.கௌதமன், மாநிலப் பொருளாளர் எம்.ரவிச்சந்திரன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எம்.செல்லையா, தா.அஜாய்கோஷ், ஆர். பொன்னுச்சாமி, எம்.ராமசாமி, என்.பெரு மாள், பி.முருகேசன், விஜயராகவன், மூர்த்தி, தெய்வேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.