tamilnadu

img

எஸ்.பி.பி.யின் கடைசி ஆல்பம்... - சோழ. நாகராஜன்

மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது மரணத்துக்கு முன்னாள் கடைசியாகப் பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஆல்பம்தான் விஸ்வரூப தரிசனம் என்பது. அதனை பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார். பாடல்களுக்கு கே.எஸ்.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். இதனை இயக்கியிருக்கிற ஸ்ரீஹரி கூறும்போது, இது 30 நிமிட இசை ஆல்பம். எஸ்.பி.பி. தான் பாடவேண்டும் என்று முடிவெடுத்தோம். பின்னணி இசை தயாராக இல்லை. டெம்போ கிளிக் டிராக் எனும் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒலிப்பதிவு செய்தோம். பின்னணி இசை இல்லாத காரணத்தால் அன்று அப்படி ஒலிப்பதிவு செய்யாமல் போயிருந்தால் இன்று இந்த ஆல்பத்தை இழந்திருப்போம் என்றார்.