சென்னை, டிச. 29- ஓசூரில் விமான நிலையம் அமைக்க ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. தமிழக அரசின் தொழில் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலை யில் அதற்கான பணிகளை அரசு தொடங் கியது. ஓசூரில் விமான நிலையம் அமைக்க சாத்தியமான இடங்களை ஆலோசகர்கள் தேர்வு செய்து வழங்க லாம். விமான போக்குவரத்திற்கு உகந்த இடம், விமான நிலையம் அமைக்க அனைத்து வசதிகளும் கொண்ட இடங் களை தேர்வு செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒசூரில் விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி கொடுத்திருப் பதாகவும், தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கிருஷ்ணகிரி எம்.பி.செல்லக்குமார் கோரிக்கை விடுத்த நிலையில் டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.