tamilnadu

img

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தாளாளர் ஜோதிமுருகன் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்

திண்டுக்கல், டிச.9- திண்டுக்கல் சுரபி கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த தமி ழக அரசு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், பாலி யல் தொந்தரவு கொடுத்த வழக் கில் திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுரு கனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண் டும் என்று வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குற்றவாளி ஜோதிமுருகன் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு வழக்குகளை பதி வதற்கு பதிலாக போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தை அச்சு றுத்தும் வகையில் மாதர் சங்க தலைவர்கள் மீது ஜாமீனில் வெளி வர முடியாத அளவிற்கு காவல் துறை வழக்கு பதிந்துள்ளது. இதிலிருந்தே குற்றவாளிக்கு சாதகமாக காவல்துறை மற்றும் பாஜக வழக்கறிஞர் பிரிவு உள் ளிட்டோர் இயங்குகிறார்கள் என்பது பொதுமக்கள் மத்தி யில் ஒரு விவாதம் நடந்து கொண் டிருக்கிறது.  ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்  தமிழக முதல் வர் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறி னார். அது ஒரு நல்ல முன்மாதிரி யான நடவடிக்கையாகும். அதே போல் நீதிமன்றம் போக்சோ குற்றவாளியான ஜோதிமுரு கனை பிணையில் விட்டிருக்கக் கூடிய இந்த சூழ்நிலையில் தமி ழக அரசு இந்த பிணையை ரத்து செய்ய சட்டரீதியான நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.  இந்த கோரிக்கையை வலி யுறுத்தி டிசம்பர் 11ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பாக திண்டுக்கல் மணிக் கூண்டில் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் தலைமை யில்  ஆர்ப்பாட்டம் நடைபெற வுள்ளது.

மேலும் தமிழ்நாடு அர சின் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நேரடியாக வந்து இந்த வழக்கில் தவறு செய்திருக்கக்கூடிய காவல்துறை மற்றும் அதிகாரி கள் மீது புகாரை பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கை தமிழக அர சின் சிபிசிஐடி விசாரணை செய்வது தான் பொருத்தமான தாக இருக்கும். ஏனெனில் காவல்துறையினர் பாலியல் புகார் கொடுத்தவர்களை அச்சு றுத்தும் நடவடிக்கையில் ஈடு பட்டிருப்பதால் உரிய ஆவணங் களை, சாட்சியங்களை கைப் பற்றியிருக்க மாட்டார்கள்.  எனவே. இந்த வழக்கை சிபி சிஐடி பிரிவு விசாரிக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும். மாவட்டக்காவல்துறை குற்றத் திற்கு ஆதரவாக செயல்படும் பாஜக வழக்கறிஞர் தெய்வேந்தி ரன் மற்றும் அவர்கள் கூட்டத் திற்கு சாதகமாக ஒருதலைப் பட்சமாக செயல்படுவதை நாங் கள் வன்மையாக கண்டிக்கி றோம்.  இவ்வாறு கே.பாலபாரதி கேட்டுக்கொண்டார். பேட்டியின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சி தானந்தம், மாநிலக்குழு உறுப் பினர் என்.அமிர்தம் ஆகியோர் உடனிருந்தனர்.