கம்யூனிஸ்ட் கட்சி தனது பத்திரிகை மட்டுமல்ல; ஏனைய பத்திரிகைகளையும், மிகவும் பிற்போக்கான முதலாளித்துவ பிரிவினரின் பத்திரிகைகள் உட்பட, அனைத்தையும் சித்தாந்த போராட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. தனது சித்தாந்த மற்றும் அரசியல் எதிரிகளை சித்தாந்த போராட்டத்தில் ஈடுபடவைத்து எதிர்வினையாற்றுகிறது. மார்க்ஸ்/ஏங்கெல்ஸ்/லெனின் இத்தகைய சமரசமற்ற கருத்துகளின் போராட்டம் மூலம்தான் சிறந்த மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தை நிலைநாட்டினர்.