தூத்துக்குடி, மார்ச் 7 தூத்துக்குடி ஸ்பிக் ஆலை வளாகத்தில் இந்தி யாவின் முதல் மற்றும் மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங் களன்று திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி யில், ஸ்பிக் நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் 150 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டு க்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதனை தங்களு டைய தொழிற்சாலைகளி லேயே உபயோகப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டு ள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக் கும் சூரிய மின்சக்திநிலை யத்தை திறந்து வைத்தார்.
22 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையத்திட்டம், நவீன கால பசுமை, நிலையான தொழில்நுட்பம் மற்றும் தன்னிறைவு பெற்ற ஆற்றல் உற்பத்தியை செயல்படுத்த ஸ்பிக் நிறுவனத்தின் நவீன உத்தியுடன் அமைக்கப் பட்டுள்ளது. மிதக்கும் சோலார் திட்டங்கள் பாரம்பரிய நில அடிப்படையிலான சோலார் ஆலைகளை விட அதிக உற்பத்தியை வழங்குவ தோடு, ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தி, விலைமதிப் பற்ற தண்ணீரை ஆவியாகி சேமிக்கிறது. இச்சூரிய மின் சக்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின் சாரமும் ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உரங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும். இந்த மிதக்கும் சூரிய மின் நிலையம், நீர் குளிர்ச்சி விளைவை எளிதாக்கி, அதிக மின் உற்பத்திக்கு உதவுகிறது.
சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய் வதைத் தவிர, நீர்த்தேக்கத் தில் உள்ள நீர் ஆவியா காமல் 60 சதவீதம் கட்டுப் படுத்துவதன் மூலம் சுற்றுச் சூழல் நன்மைக்கும் இத்திட் டம் உதவுகிறது. இந்தத் திட்டம் இந்திய சூரிய ஆற் றல் மேம்பாட்டுத்துறையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். ஸ்பிக்நிறுவனத்தின் மிதக்கும் சூரியமின் நிலை யத் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தி மாநிலத்தில் உள்ள தொழில்களை மேம்படுத்துவதோடு, புதுப் பிக்கத்தக்க எரிசக்தியில் தமி ழகத்தை முன்னோடி மாநில மாக மாற்றும் இலக்கை அடைவதற்கான ஒரு மைல் கல்லாக அமையும். நிகழ்ச்சியில், அமைச் சர்கள் ராஜகண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெ. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதா கிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் எஸ்.ஆர். ராமகிருஷ்ணன், முதன்மை நிதி அலுவலர் கே.ஆர். ஆனந்தன் மற்றும் நிறுவனத்தின் உயர் அலு வலர்கள் கலந்துகொண்ட னர்.