tamilnadu

img

நதிக்கும் வாழ உரிமை உண்டு - சிதம்பரம் ரவிச்சந்திரன்

தென் அமெரிக்க நாடான ஈக்குவடார் நீதிமன்றம் அந்நாட்டின் தலைநகர் கீட்டோ (Quito) வழியாக ஓடும் மச்சங்காரா (Machángara) நதியை மாசுகளில் இருந்து காப்பாற்ற இயற்கையின் அம்சங்களுக்கும் வாழ்வுரிமை உண்டு என்ற மகத்தான சட்டத்தின் கீழ் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. நதியில் கலக்கவிடப்படும் கழிவுகள் அதன் உரிமையை மீறியது என்று வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு இயற்கையைக் காக்கும் போராட்டத்தில் ஒரு வரலாற்று வெற்றி என்று போராளிகள் கூறுகின்றனர். ஈக்குவடார் அரசியல் அமைப்பு  சட்டத்தின்படி அந்நாடு, நதிகள்  போன்ற இயற்கையின் அம்சங்க ளுக்கும் சட்ட உரிமை கொடுத்து  அங்கீகரித்துள்ளது. இதன் அடிப்ப டையில் இந்த தீர்ப்பு வெளியிடப் பட்டுள்ளது. “மச்சங்காரா நதி தலை நகர் கீட்டோ வழியாக ஓடுகிறது. இதன் கலாச்சார பண்பாட்டு தாக்  கத்தால் மக்கள் கவரப்பட்டு இதன்  கரையில் பல காலம் வாழ்ந்துவரு கின்றனர்” என்று நதியின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கிட்டுக் காரா (Kitu Kara) என்னும் சூழல் பாதுகாப்பு குழுவின் செயல் பாட்டாளர் டாரியோ இசா (Darío Iza) கூறுகிறார். மேல் முறையீடு மற்றும் விசா ரணை நடவடிக்கைகள் தொடர்ந்தா லும் அரசு நதியை தூய்மைப்படுத்த உடனடியாக செயல்படவேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி யுள்ளது. கீட்டோ நகரில் வாழும்  2.6 மில்லியன் மக்கள் குப்பைகளை யும் கழிவுகளையும் ஆண்டீஸ் மலை யில் இருந்து உற்பத்தியாகி இந்நக ரம் வழியாக ஓடிவரும் மச்சங்காரா நதியில் கொட்டுகின்றனர். நகருக்குள் நுழைவதற்கு முன்பு வரை மாசுகள் இல்லாமல் ஓடிவரும் நதி கீட்டோவிற்குள் நுழைந்தவுடன் கழிவுகளால் மாசடைகிறது. நீரை  தூய்மைப்படுத்த போதுமான  திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை. ஓடிவரும் வழியில் குன்றுப்  பகுதிகளில் இருந்து டன் கணக்கில்  குப்பைகளையும் சேர்த்து எடுத்து வருகிறது என்று உலகளாவிய இயற்கை உரிமை பாதுகாப்பு கூட்ட மைப்பு (Global Alliance for Rights  of Nature) கூறுகிறது.  நதியில் உள்ள சராசரி ஆக்சிஜனின் அளவு  2% மட்டுமே. இது நீர் வாழ் உயிரி னங்களின் வாழ்விற்கு அச்சுறுத்த லாக அமைகிறது. தென் மற்றும் வட அமெரிக்கா வின் சில பகுதிகளில் குடிமக்கள் தூய  சூழலுடன் வாழ சட்டப்படி உரிமை  பெற்றுள்ளனர். என்றாலும் இயற்கை யின் அம்சங்களுக்கு அரசியல் சாசனத்தின் கீழ் வாழ்வுரிமை வழங்கி யுள்ள ஒரு சில உலக நாடுகளில் ஈக்கு வடாரும் ஒன்று. இந்நாடுகளில் நதிகள், காடுகள், குன்றுகள், மலைப்பகுதிகள், வன  உயிரினங்கள் போன்ற இயற்கை யின் அம்சங்களை சூழலுக்கு எதி ராக பயன்படுத்துவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஈக்குவடாரில் வழங்கப்பட்டுள்ள நதியின் தூய்மை காக்க உதவும் இந்த தீர்ப்பு உலகின் எல்லா நாடு களுக்கும் ஒரு சிறந்த முன் மாதிரி யாக விளங்கும் என்று சூழல் ஆர்வ லர்கள் நம்புகின்றனர்.