புதுக்கோட்டை, ஏப்.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு முன்னாள் உறுப்பினரும், மனமடை ஊராட்சியின் முன்னாள் தலைவரும், விவசாயிகள் இயக்கத்தின் முன்னோடி யுமான தோழர் தம்பிஅய்யா அண்மை யில் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான மன மடையில் செவ்வாயன்று நடைபெற்றது. தோழர் தம்பிஅய்யாவின் படத்தைத் திறந்துவைத்து கே.பால கிருஷ்ணன் பேசியது:- 60 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடும், இந்தப் பகுதியில் உள்ள உழைப்பாளி மக்களோடும் இரண்டறக் கலந்து நின்றவர் தோழர் தம்பிஅய்யா. இப்பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு எதிராகவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி யவர். கறம்பக்குடி வட்டாரப் பகுதி களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விதையூன்றியவர்களில் முக்கியமானவர் தோழர் தம்பி அய்யா. அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர்களையும், உறவினர் களையும் கட்சியில் இணைத்து முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்விற்கு கட்சியின் கறம்பக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.வீர முத்து தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தஞ்சா வூர் மாவட்டச் செயலாளர் சின்னைப் பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன், சிபிஐ(எம்எல்) மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பேசினர்.