tamilnadu

img

கோவில் நில உரிமை மீட்புப் போராட்டம் வெற்றி! நூறு ஆண்டுகால குத்தகை விவசாயத்திற்கு அங்கீகாரம்

கோவில் நில உரிமை மீட்புப் போராட்டம் வெற்றி! நூறு ஆண்டுகால குத்தகை விவசாயத்திற்கு அங்கீகாரம்

 கிருஷ்ணகிரி, ஜூன் 6 -  தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஒன்றியத்தில் உள்ள கம்பத்து பள்ளி யில் நான்கு தலைமுறைகளாக கோவில் நிலத்தில் குத்தகை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.  இந்த போராட்டத்தின் விளைவாக இந்து சமய அறநிலையத்துறை ஏலம் விடும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட் டம், தளி ஒன்றியத்தில் சிக்கண்ணா, நாராயணம்மா உள்ளிட்ட ஐந்து பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பத்தி னர் தங்களின் மாலகெரகை கோவி லுக்கு சொந்தமான நான்கு சர்வே எண்களில் உள்ள 6.5 ஏக்கர் நிலத்தில் மானாவாரி விவசாயம் செய்து வரு கின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலை யத்துறை இந்த நிலத்தை ஏலம் விட முயற்சித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். 2018ஆம் ஆண்டு முதல் இந்த பிரச்சனை தீவிரமடைந்ததாக தெரிய வருகிறது. அப்போது சிலர் தலித்துகள் கோயிலில் பூஜை செய்வதை எதிர்த்ததுடன், கோவில் நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது என்றும் கூறினர். மேலும் இந்த கோவில் உயர் சமூகத்தைச் சேர்ந்த வர்களுக்கு சொந்தம் என்று கூறி கோவிலையும் நிலத்தையும் கைப்பற்ற முயற்சித்தனர். பேச்சுவார்த்தை இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகி யவை பங்கேற்றன. டிராக்டர் மூலம் நிலத்தில் உழவு செய்யும் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்ராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மோகனசுந்தரம், கணேஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சத்யா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்,தற்போதைக்கு ஏலம் விடுவதை நிறுத்தி வைப்பதா கவும், அமைதியான பேச்சுவார்த் தைக்கு ஒப்புக்கொண்டு அதற்கான தேதியுடன் கடிதம் வழங்குவதாகவும் அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, இந்த போராட்டம் வெற்றி பெற்றது.