“நிலத்தடி நீருக்கும் வரியா?” மோடி அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம்
தஞ்சாவூர், ஜூன் 28- விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சனிக் கிழமை காலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் இந்த கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என எச்ச ரித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சரின் அறிவிப்பால் கொந்தளிப்பு
ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் விவசாயத்திற்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தினால் அதற்கு வரி விதிக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி னர். தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செய லாளர் சாமி.நடராஜன் கண்டன உரை யாற்றினார்.
பாஜக ஆட்சியில் 1.45 லட்சம் விவசாயிகள் தற்கொலை
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய சாமி.நட ராஜன்,”பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த 11 ஆண்டுகளில் தவறான வேளாண் கொள்கைகளைக் கடைப் பிடித்து வருவதால் வேளாண் விவசாயி கள் பெருமளவு நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். பாஜக ஆட்சிக்காலத்தில் மட்டும் ஏறத்தாழ 1 லட்சத்து 45 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர்” என்று கடுமையாக விமர்சித்தார்.
நீர்ப்பாசன ஏற்பாடுகளின் குறைபாடு
நாட்டின் நீர்ப்பாசன நிலவரத்தை விளக்கிய அவர்,”இந்தியாவில் உள்ள விளை நிலங்களில் 35 விழுக்காடு விளை நிலங்களுக்கு மட்டுமே முறை யான நீர்ப்பாசன ஏற்பாடுகள் உள்ளன. மீதமுள்ள 55 விழுக்காடு விளைநிலங்க ளில் மழைநீரைப் பயன்படுத்தி விவ சாயம் நடைபெறுகிறது. அதுபோக மீத முள்ள இடங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தித்தான் விவசாயம் நடை பெற்று வருகிறது”என்று தெரிவித்தார்.
தமிழகத்திலேயே 22 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள்
தமிழகத்தின் நிலவரத்தை சுட்டிக் காட்டிய அவர், “குறிப்பாக தமிழ கத்தில் 22 லட்சம் ஆழ்துளைக் கிணறு கள் உள்ளன. பாசனக் கிணறுகள் மூல மும் சாகுபடி நடந்து வருகிறது. இந்த நிலத்தடி நீருக்கும் வரி விதிப்பது என்பது இந்தியாவில் இருக்கும் ஏழை, சிறு, குறு, நடுத்தர விவசாயிகளை வெகுவாக பாதிக்கும்” என்று எச்ச ரித்தார்.
கார்ப்பரேட் சார்பு கொள்கை
ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய சாமி.நடராஜன்,”இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றன. இந்த தொ ழிற்சாலைகளுக்காக பூமியில் 2000, 3000 அடிகள் துளையிட்டு பல கோடி லிட்டர் தண்ணீரை எடுத்துப் பயன் படுத்துகிறார்கள். அவர்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்காமல், வரி விதிக்காமல், மானிய சலுகைகளை அள்ளி வழங்குகிறது மோடி அரசாங் கம்” என்று கடுமையாக சாடினார்.
விவசாயிகளை வெளியேற்றும் சதி
நிலத்தடி நீர் வரியின் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்திய அவர், “இந்த விவசாயிகளை படிப்படி யாக விவசாயத்திலிருந்து அப்புறப் படுத்தி கார்ப்பரேட் கைகளில் இந்த விளைநிலங்களைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய மோடி அரசு செய்து வருகிறது. எனவே, இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
விவசாயிகளுக்கு நீதி மறுக்கும் அரசு
அரசின் தவறான வேளாண் கொள் கைகளை பட்டியலிட்ட அவர்,”விவ சாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கப்படவில்லை. இயற் கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவ சாயிகளுக்கு ஒன்றிய அரசாங்கம் எந்தவித இழப்பீடும் வழங்குவ தில்லை” என்று குறிப்பிட்டார்.
நாடு தழுவிய போராட்டம் எச்சரிக்கை
ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சாமி.நடராஜன், “இதற்குப் பிறகும் இந்த திட்டத்தை செயல் படுத்த ஒன்றிய மோடி அரசாங்கம் முனையுமேயானால், பல்வேறு விவ சாய சங்கங்களை ஒன்றிணைத்து நாடு தழுவிய அளவில், எப்படி மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதி ராக போராட்டம் நடந்ததோ, அது போன்ற போராட்டத்தை முன்னெடுப் போம்” என்று அறிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் சோ.பாஸ்கர் (சிபிஐ), கரும்பு விவசாயிகள் சங்கம் டி.கோவிந்தராஜ், தமிழ்நாடு நலிவுற்ற விவசாயிகள் சங்கம் முகமது இப்ராஹிம், காவிரி விவசாயிகள் சங்கம் ஏ.கே.ஆர். ரவிச்சந்திரன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ், அறிவழகன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் கே. அன்பு உள்ளிட்ட தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், தோழமை சங்க நிர்வாகி கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். (ந.நி)