tamilnadu

img

அடாவடி முறையில் வரிவசூல் சிபிஎம் சார்பில் குப்பை கொட்டும் போராட்டம்

மதுரை, மார்ச் 12- மதுரை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் அதிகாரிகளின் துணையோடு சாமானிய மக்களிடம் வீட்டு வரி வசூலை மனிதாபிமானத்துடன் அணுகாமல் அடா வடித்தனமாக நடந்து கொள்கிறது. அதா வது வீட்டு வரி கட்டாத வீடுகளின் முன் பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகளை வைத்து மிரட்டி பணிய வைக்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் மதுரை மாநகரில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள், தனியார் மருத்துவ மனைகள், தனியார் பள்ளிகள் பெரும் தொகை கட்டாமல் இருக்கின்றன அவர்களி டம் சென்று வரி வசூலைசெய்யாமல் சிறிய வீட்டு உரிமையாளர்களை மிரட்டி பணிய வைக்கும் விதமாக குப்பைத் தொட்டியை வைத்து வரி வசூலை செய்திட நினைக் கின்றது. இதை கண்டிக்கும் வகையில் தெற்கு மண்டல அலுவலகத்தை முற்றுகை யிட்டு குப்பை கொட்டும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மத்திய பகுதி குழு சார்பில் பகுதி குழு செயலாளர் பி. ஜீவா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் பி. கோபிநாத் மற்றும் பகுதி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.