tamilnadu

img

இந்தியில் பேசச் சொல்லி தமிழக மீனவர்களுக்கு சித்ரவதை

படுகாயமடைந்த மீனவர்களுக்கு நாகைமாலி எம்எல்ஏ ஆறுதல்

நாகப்பட்டினம், அக்.23 - இந்திய கடற்படையால் தாக்கப் பட்ட மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரும், கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி நேரில் சென்று நலம் விசாரித்தார். நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் இந்திய கடற்படையால், கடந்த அக்.21 அன்று நள்ளிரவு 3 மணிக்கு தாக்குதலுக்கு உள்ளான 9 மீனவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளிலிருந்து சுதீர் (30), செல்வகுமார் (42), செல்லதுரை (46),  சுரேஷ் (41), விக்னேஸ்வரன் (24), மகேந்திரன் (31), பாரத் (24), பிரசாந்த் (24), மோகன்ராஜ் (32), வீரவேல் ஆகிய 10 பேர் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் கடந்த அக்.21 அன்று இரவு 3 மணிக்கு ஜெகதாப்பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது. பின்னர் மீனவர்களின் படகிற்குள் சென்று சோதனையிட்ட பிறகு, நீங்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளீர் களா, போதைப் பொருட்கள் ஏதும் கடத்து கிறீர்களா என  கேட்டுள்ளனர். என்ன நடக்கிறது  என புரியாமல் மீனவர்கள் தவித்துள்ளனர்.  இலங்கை கடற்படைதான் நம்மை தாக்கு கிறது என்று நினைத்துள்ளனர். ஆனால், இந்தி யில் பேசச் சொல்லி தாக்கியதன் மூலம், தாக்கி யவர்கள் இந்திய கடற்படையை சேர்ந்தவர்கள் என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது. 

இந்தி மொழி பேச சொல்லி தாக்குதல்

மீனவர்கள் சென்ற படகில் இந்திய தேசியக் கொடி கட்டப்பட்டு இருந்ததைப் பார்த்த பின்பும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். படகில் சென்ற மீனவர் களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மீனவர் அனைவரையும் மண்டியிடச் செய்துள்ள னர். கடற்படையில் இருந்த அதிகாரிகள் அனை வரும் இந்தி மொழியில் பேசியதற்கு, மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர். இதில் கோபமுற்ற கடற்படை போலீசார் இந்தி யில் பதில் சொல்லுமாறு மீனவர்களை தாக்கி யுள்ளனர். மீனவர்களை தரையில் அமரச் சொல்லி ஷூ காலால் அவர்கள் மீது ஏறி நின்றும், கைகளை பின்னால் கட்டி மண்டியிடச் செய்தும்  அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்களுக்குள்ளே இந்தியில் பேசிக்கொண்டு, இவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிப்பதும், ஷூ காலால் எட்டி உதைப்பதுமாக நடந்துள்ள னர். பின்னர் அனைவரின் ஆதார் கார்டுகளை யும் வாங்கிப் பார்த்துவிட்டு, ‘உங்களுக்கு இந்தி தெரியாதா’ என்று கூறி இழிவான வார்த்தைகளால் மீனவர்களை திட்டியுள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதை

முன்பு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கினார்கள்; இன்று இந்திய கடற்படையினரே தமிழக மீனவர்களை தாக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்திய எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது, கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையின் செயல், ‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக’ உள்ளது. பல மொழிகள் பேசும் இந்திய நாட்டில் குறிப்பிட்ட மொழியைப் பேசச் சொல்லி அடிப்பதும், துன்புறுத்துவதும் கண்டிக்கத்தக்கது.  தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாடிட கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற  மீனவர்களை இந்திய கடற்படையினர் கொடூர மாக தாக்கியதால், பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர் குடும்பங்களிலும் சோகமே உரு வெடுத்துள்ளது. இந்திய கடற்படை நடத்திய தாக்குதலால்  தமிழக மீனவர்கள் மனதளவில் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புக்கு ஆளாகி யுள்ளனர். 

கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி ஆறுதல்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 மீனவர்களையும் நேரில் சென்று நலம் விசாரித்து, அவர்களுக்கு தேவையான நிவாரணம் பெற்றுத் தருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி தெரிவித்தார். அவருடன் சென்ற கட்சியின் நாகை நகரச் செயலாளர் க.வெங்கடேசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அருள்தாஸ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்டோரும்  ஆறுதல் கூறினர்.