தஞ்சாவூர், செப்.8 - உலகம் முழுவதும் தமிழை பட்டப் படிப்பு நிலையில் பயிலும் மாண வர்களுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் பயிற்சிகள் அளிப்பது தொடரும் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் அறிவித்தார். அயல்நாட்டுத் தமிழ்க்கல்வி சார்பில் இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 6 நாட்கள் பயிலரங்கப் பயிற்சி சான்றிதழ் அளிப்பு நடை பெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தெரி விக்கையில், “அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட, இலங்கை மாணவர்களுக்கான இப்பயி லரங்கில், கல்வெட்டியல், தொல்லி யல், கடலடி அகழாய்வு, சங்க இலக்கி யம், மொழியியல், நாட்டுப்புறவியல், ஓலைச்சுவடி வாசிப்புப் பயிற்சி, பிழை யின்றி ஆய்வுத்தாள் எழுதுதல் முறை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளை மையப்படுத்தி, “தமிழியலின் பன்முகப் பரிமா ணங்கள்” என்ற தலைப்பில் பயிலரங்க வகுப்புகள் நடத்தப்பட்டன. சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாட்டு அறிஞர்களால் பயிற்சியளிக்கப்பட்ட இப்பயிலரங்கம் 01.09.2024 முதல் 06.09.2024 வரை பல்வேறு பொருண்மை களில் நடத்தப்பட்டது. இப்பயில ரங்கில் பங்கேற்பதற்காகப் பேராத னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஸ்ரீபிரசாந்தன் தலை மையில் 19 மாணாக்கர்கள் கொண்ட குழுவினர் 3 விரிவுரையாளர்களுடன் வருகை தந்தனர். இப்பயிலரங்கின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பாரத் கல்விக்குழு மத்தின் நிர்வாக இயக்குநர் புனிதா கணேசன் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்திப் பேசினார். உலகத்தின் போக்கிற்கு ஏற்ப தமி ழியலின் தளம் விரிவடைந்து செல்வ தால் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வரை மையமிட்டு, “தமிழியலின் பன்முகப் பரிமாணங்கள்” என்னும் தலைப்பில் பயிலரங்கம் நடத்தப்பட்டது” என்றார். இச்சிறப்பு நிகழ்வில், பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன், கலைத்துறை முதன்மையர் முனைவர் இளையாப்பிள்ளை வாழ்த்துரை வழங்கினர். கலைவளர்மாமணி மணி கண்டன், சங்ககாலம் முதல் சமகாலம் வரை என்ற தலைப்பில் தமிழ் மரபிசைக் கருவிகளை வாசித்துக் காட்டி உரை யாற்றினார். முன்னதாக முனைவர் ஞா.பழனி வேலு வரவேற்க, முனைவர் தெ. வெற்றிச் செல்வன் நன்றி கூறினார்.