tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஸ்தாபன தின கொடியேற்று நிகழ்ச்சி

மதுரை, மே 6-  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  37 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடி யேற்று நிகழ்ச்சி மதுரை சொக்கிகுளம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை அலுவல கத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் கொடியை மாநில பொதுச் செயலாளர் ஆ. செல்வம் ஏற்றிவைத்து உரையாற்றினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஜெ. மூர்த்தி, செயலாளர் க. நீதிராஜா, மாவட்ட இணைச்செயலாளர் மகேந்திரன், சந்திர பாண்டி மற்றும் வட்ட கிளை நிர்வாகிகள், பழனிச்சாமி, ஸ்டாலின், அய்யங்காளை, மனோகரன், கந்தசாமி, ஞானப்பிரகாசம், செல்வகுருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் மதுரையில் உள்ள பல்வேறு வட்ட கிளைகளில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.