tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

அரசுப் பள்ளியில் கணினிகள், வீடியோ  ப்ரொஜெக்டர் கருவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பரக்கலக்கோட்டையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் கல்வி பயின்று வருகின்றனர்.  இங்குள்ள பள்ளி வளாகத்தில் தனியாக கணினி அறை ஒன்று உள்ளது. தமிழக அரசின் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினிகளும், ஒரு லட்சம் மதிப்புள்ள வீடியோ ப்ரொஜெக்டர் கருவியும் மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த கணினி அறையின் மேற்கூரை பழுதடைந்து, மழை பெய்யும் காலங்களில் உள்ளே தண்ணீர் ஒழுகுவதால் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து கனமழை பெய்ததால் கட்டிடத்தின் மேலே தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு கணினிகள் பாதுகாக்கப்பட்டது.  இந்நிலையில், தற்போது அறையின் மேல் தகர சீட்டு அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், கணினி உள்ளிட்ட மாணவர்களின் கல்வி பயிலும் சாதனங்கள் மழையினால் சேதமடையாத வகையில், பழுதடைந்துள்ள மேற்கூறையை சரி செய்து நிரந்தரமாக மேல் புறத்தில் தகரக் கொட்டகை அமைத்து தருமாறு, பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும், கலை நிகழ்ச்சிகள் நடத்த ஒரு கலையரங்கமும் தமிழ்நாடு அரசு அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்ட நிர்வாகமும் இதை கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

நம்மிடம் வசூல் செய்கிற பணத்தில் நமக்கான பங்கை தருவதில்லை மோடி மீது அமைச்சர் குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்ட திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கூவத்தூர் கலைஞர் திடலில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது.  முன்னதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் வரவேற்று பேசினார். திமுக தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, நாளை நமது கழகத்தின் சார்பாக போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டம் எதற்கு என்றால் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான பணத்தை ஒன்றிய அரசு முறையாக கொடுக்காததை கண்டித்தும், கொடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறுகிறது.  நாம் கொடுக்கும் வரிப்பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு போகும்  ஆட்சியாக தான் இன்றைக்கு மோடி அரசு உள்ளது. திருடுபவர்கள் வயிற்றுப் பசிக்காக திருடுகிறார்கள். இதைதான் ஒன்றிய மோடி அரசாங்கம் செய்துகொண்டிருக்கிறது. நமக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. நம்மிடம் வசூல் செய்கிற பணத்தில் நமக்கான பணத்தை தருவதில்லை என பேசினார்.  தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், இளம் பேச்சாளர் மோகன், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், திமுக சட்டத்திட்ட திருத்த குழு இணை செயலாளர் சுபா சந்திரசேகர், சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கலாசுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.