உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
துணைவேந்தர் நியமனச் சட்டம்
புதுதில்லி, ஜூன் 4 - தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் மசோதாவுக்கு, உச்ச நீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டப் பிரிவுகளை எதிர்த்து பாளையங் கோட்டையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். கடந்த மாதம் இந்த மனு நீதிபதி கள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரிப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பது போல் உள்ளதாக வாதிட்டார். இருப்பினும், உச்ச நீதிமன்றத் தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட துணை வேந்தர்கள் நியமனச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கள் உத்தரவிட்டனர். இந்நிலையில், துணைவேந்தர் கள் நியமன சட்டத்திற்கு இடைக் கால தடை விதித்துள்ள உயர் நீதி மன்ற நீதிபதிகளின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், சென்னை உயர் நீதிமன்றத் தின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் நட வடிக்கை காரணமாக துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததாகவும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மூலம் அதற்கு விடிவு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இந்தச் சட்டங் கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது தவறானது என்று கூறப்பட்டுள்ளது.