tamilnadu

img

‘உழவே உன்னதமானது!’

சென்னை,மார்ச் 19- ஒரு டன் கரும்புக்கு 192 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப் படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் சனிக்கிமையன்று (மார்ச்19) அத்துறைக்கான  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசுகையில், “உழவர்தம் உள்ளத்தையும் வறியோர் வயிற்றில் உள்ள பள்ளத்தையும் நிரப்ப வேண்டும் என்பதற்காக சென்ற ஆண்டு தமிழக வர லாற்றில் முதன்முறையாகத் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றும்  பொன்னிற நெல் நட்டால் வருகிற வருமானத்தை விட நிலத்தில் மஞ்சள் நிறக் கல் நட்டால் வருமா னம் அதிகம் வரும் என்கிற மயக்கத்தில் விளை நிலங்கள் எல்லாம்  வீட்டு மனைகளாகும் பரிதா பத்தைப் போக்கி உழவுத் தொழிலே உன்னதம் நிறைந்தது என்பதை உணர்த்தும் வகையில் தன்னம் பிக்கை ஒளிரச் செய்யும் நோக்கத்தில் இரண்டாவது முறையாக வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஆண்டு விதைக்கப்பட்ட திட்டங்கள் வேரூன்றியுள்ள நிலையில் இந்த ஆண்டும் அவை தழைத்து வளர்வதற்கான அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீராதாரம் குறையும் அபாயம் 

கடந்த முறை வேளாண் துறைக்கு ரூ.32,775.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முறை வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய துறை களான கால்நடை பராமரிப்பு, மீன்- பால்-நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சி, உணவு, கூட்டுறவு, வருவாய், வனம், பட்டு வளர்ச்சித்துறை ஆகிய வற்றிற்கு ரூ.33,007.68 கோடியாக நிதி ஒதுக்கீடு அதிகரித்து அடுத்த பரிமாண நகர்வுக்குத் தேவையான திட்டங்களும் அறிமுகப்படுத்தப் படுகின்றன என்றார். சவால் தரும் பருவ நிலை கால மாற்றத்தால் தமிழ்நாட்டில் வருங்காலங்களில் நீர் ஆதாரம் குறையும் அபாயம் இருப்பதால் மாற்றுப் பயிர் சாகுபடி ஊக்கப்படுத்தப்படும். விவசாயப் பயிர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வரும் பூச்சி நோய்த் தொற்றை எதிர்கொள்ளவும் அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கிழங்கு வகைகள், காய்கனிகள், கீரை வகை பயிர் சாகுபடிக்கு மாநில அரசு மேலும் ஊக்கம் கொடுக்கும்.  தக்காளி, கத்தரி வகைகளுக்கு மாணவர் விடுதி களிலும் தோட்டம் அமைத்து கொடுக்கப்படும். கல்வராயன் மலை, கொல்லிமலைகளில் பூண்டு சாகுபடியும், நீலகிரியில் காபி சாகுபடிக்கும் முக்கி யத்துவம் கொடுத்து தோட்டக்கலை துறை மூலம்  பாரம்பரிய ரகங்கள் மீட்கப்படும் என்றும் தெரிவித்தார். வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த பண்ணைகள் பாதுகாப்பு திட்டம் கொண்டுவரப்படுகிறது. விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும். டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்கள் வழக்கம்போல் தூர்வாரப்படும். 100 இடங்களில் அச்சு வெல்லம் தயாரிக்கப்படும் என்றும் விவசாயத்தில் நவீன எந்திரங்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாதவை என்றும் அமைச்சர் கூறினார்.

உழவர் துறைக்கு மாறிய சர்க்கரைத் துறை!

கரும்பு உற்பத்தி சர்க்கரைத் கட்டுமானத்தை உயர்த்துவதற்காக மாநில அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகள் அதிக மகசூல் தரக்கூடிய, அதிக சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்பு ரகங்களைப் பயிரிட அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருதையும் சுட்டிக்காட்டினார். கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்க ளின் நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரி சீலனை செய்து கரும்பு விவசாயிகளின் நலனை காக்கும் வகையில், கடந்த ஆண்டைப்போலவே, சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்த விவசாயி களுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத் தொகை யாக டன் ஒன்றுக்கு ரூ. 195 உயர்த்தி வழங்கப் படும் என்றும் இதன்மூலம் 1 லட்சத்து 20 ஆயிரம் விவ சாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் அவர்கூறினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கரும்பு பற்றாக் குறை காரணமாக 2016-17 ஆம் ஆண்டு முதல் இயங்காமல் இருக்கும் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு ஆலையை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நட வடிக்கை எடுக்க குழு ஒன்றும் அமைப்பதாகவும் அமைச்சர் அறிவித்தார். சென்ற நிதி நிலை அறிக்கையை தலைநகர் தில்லியில், வேளாண் சட்டங்கள் வேண்டாம் என்று மன உறுதியுடன் போராடி வந்த உழவர் பெரு மக்களுக்கு காணிக்கையாக்கினேன். அவர்தம் போராட்டம் வெற்றி பெற்றதை எண்ணி பூரிப் படைவதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

(வேளாண் பட்ஜெட் : முழு விபரம்.5)