tamilnadu

img

தமிழக ஆளுநரை கண்டித்து மாணவர்கள் ஆவேசம்

கோவை, பிப்.4–  இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்படுவதாக குற்றம் சாட்டி வெள்ளியன்று இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடு பட்டு கைதாகினர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து அதனை தமிழக ஆளுநர் ரவி அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ளார். இது ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும், மாண வர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இச்செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளியன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவையில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். சங்கத்தின் மாநிலச் செய லாளர் வீ.மாரியப்பன் தலைமையில் தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தும், அவரை ஒன்றிய அரசு  உடனடியாக திரும்பப் பெற வலி யுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பிய படி ஊர்வலமாக வந்தனர். இவர் களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி  கைது செய்ய முயன்றனர்.  இதனைத்தொடர்ந்து தமிழக மாணவர்களுக்கு ஆளுநர் மிகப் பெரிய துரோகம் இழைத்துவிட்ட தாக குற்றம்சாட்டி  தமிழக ஆளுநர் ரவியின் உருவப்படத்தை ஆவேச மாக கிழித்தெறிந்தனர். இதனால் ஆட்சியர். அலுவலகம் முன்பு சிறிது நேரம் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாநில செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்

முன்னதாக, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் செய்தியாளர்களிடம்  கூறுகையில், தமிழக மாணவர் களின் மருத்துவக் கனவை சீர்குலைக் கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டு மென கடந்த ஐந்து ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஒட்டுமொத்த தமிழகமே நீட்தேர்வை  எதிர்க் கிறது. இதனையேற்று  தமிழக சட்ட மன்றத்தில் ஏகமனதாக நீட் தேர்வு விலக்கு மசோதா தாக்கல் செய்யப் பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. கடந்த 5 மாத கால மாக தமிழக ஆளுநர், காலம் தாழ்த்தி விட்டு தற்போது அதனை திருப்பி அனுப்பியுள்ளார். இது  இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. ஆளுநரின் இந்த செயலை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்து வம், சமூகநீதி, மக்களாட்சி மாண்பு களுக்கு எதிராக ஆளுநர் செயல்படு கிறார். நீட் தேர்வு கிராமப்புற மாண வர்களுக்கு பயன்படுகிறது என் கிறார். எந்த ஆய்வின் அடிப்படை யில் இந்த கருத்தை ஆளுநர் தெரி விக்கிறார்? 80 ஆயிரம் பேர்களிடம்  கருத்தை கேட்டு ஆய்வு செய்து நீதி யரசர் ஏ.கே. ராஜன் கமிட்டி   நீட்  தேர்வு தமிழகத்துக்கு தேவை யில்லை என்று அறிக்கையை சமர்ப் பித்து இருக்கிறது. தமிழக ஆளுநர் பொத்தம் பொதுவாக ஒரு கருத்தை சொல்லி நீட்தேர்விற்கு நியாயம் கற்பிக்கிறார். ஆகவே, தமிழக மக்க ளுக்கு விரோதமான நடவடிக்கை யில் ஈடுபடும் தமிழக ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுவரை எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.

சேலம்

இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்டக் குழுவின் சார்பாக சங்ககிரி பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பவித்ரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.