tamilnadu

img

அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் பெற தூத்துக்குடி காமராஜர் கல்லூரி ஒப்புதல்

சென்னை, ஜூலை 3- சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும்  பாடப்பிரிவுகளுக்கு அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலித்த தூத்துக்குடி காமராஜர் கலை அறிவியல் கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் 3 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திங்களன்று நடைபெற்ற அரசு தரப்பு பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதை அடுத்து போராட்டம் கைவிடப் பட்டது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்சாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளும் சுயநிதி பாடப்பிரிவுகளும் உள்ளடக்கிய கல்லூரி ஆக செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் 2000க்கு மேற்பட்ட மாணவர்களும் ஸ்ரீநிதி பாடப்பிரிவுகளில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் மொத்தம் 5000க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கும் அரசு நிர்ண யித்திருக்கின்ற கட்டணத்தை வசூலிக்கா மல் பல மடங்கு அதிகமாக வசூலித்து வந்தனர். இதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஜூன் 26 அன்று கல்லூரி மாண வர்களோடு இணைந்து வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்படும் என்றும் அதன் மூலம் சுமூகமான தீர்வு எடுக்கப்படும் என்பதன் அடிப்படையில், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.  ஆனால், பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலவரத்தை தூண்டுகின்றனர் என்று உண்மைக்கு புறம்பாக செய்திகளை கூறி கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்தது.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த துரோக செயலை கண்டித்து ஜூன் 27  அன்று மீண்டும் கல்லூரியில் போராட்டம் துவங்கியது. கல்லூரி நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கான குழுவை அமைக்காம லும் எந்த ஒரு உடன்பாட்டிற்கும் வராம லும் எதேச்சதிகாரப் போக்குடன் கல்லூரி க்கு நான்கு நாள் விடுமுறையை அளித்தது. விடுமுறை முடிந்து திங்களன்று (ஜூன் 3) மீண்டும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத் தின் தலைமையில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் தொடர் போராட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அரசு தரப்பில் தூத்துக்குடி தாலுகா வட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாணவர் சங்கத்தின் சார்பில் மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் கார்த்திக், கிளை நிர்வாகி நேசமணி, கல்லூரி மற்ற மாணவர்கள் தரப்பிலிருந்து 6 மாண வர்கள் மற்றும் கல்லூரி முதல்வர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கல்லூரி நிர்வாகத்தால் உயர்த்தப்பட்ட கட்டணம் பல மடங்காக உள்ளதை சுட்டிக்காட்டி அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

பேச்சுவார்த்தையில், கடந்தாண்டு கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் மட்டும் உயர்த்துவது, வரும் கல்வியாண்டில் இருந்து முதலாம் ஆண்டு சேர்க்கையின் பொழுது என்ன கட்டணம் வசூலிக்கப்பட்ட தோ அதையே மூன்றாண்டுகளும் தொடர் வது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறுவது, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு கட்டணத்தை நிர்ண யம் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்குவது என்றும் அந்த கட்டணம் அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தோடு உடன்பட்டதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  30 நாட்களில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு எந்த ஒரு நட வடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடு பட்ட மாணவர்கள் மீது எந்த ஒரு பழி வாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.  இப்போராட்டத்தில் தொடர்ச்சியாக இந்திய மாணவர் சங்கத்தோடு இணை ந்து வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி காமராஜ் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கும், ஆதரவு அளித்த பொதுமக்கள், பத்திரிகை யாளர்கள் மற்றும் பாதுகாப்பு அளித்த காவல்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.  இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;