சென்னை,மார்ச்5- வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் நிலையில், கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தா மரைக் கண்ணன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினம் அருகே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக 6 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிக ளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக் கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 7 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 6, 7 ஆம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக் கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
6 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய வடதமிழக மற்றும்தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45-65 கி.மீ. வேகத்தில் சூறா வளிக் காற்று வீசக்கூடும். வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 40-60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். 7 ஆம் தேதி வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் 35-55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.