சிறுபான்மை மக்கள், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு வழங்கவும், அரசியலமைப்பு சட்டப்படி மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தியும் திங்களன்று (ஜூன் 6) சென்னையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நலக்குழுவின் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நலக்குழுவின் தலைவர் எஸ்.நூர்முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னிஅரசு உள்ளிட்டோர் பேசினர்.