tamilnadu

img

சத்துணவு ஊழியர் சங்க மாநில மாநாடு

தூத்துக்குடி, மார்ச்.12- தூத்துக்குடியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 15-ஆவது தமிழ் மாநில மாநாடு மார்ச் 12, 13 தேதிகளில் தூத்துக்குடி எட்டையபுரம் சாலை யில் உள்ள ஏ.வி.எம் கமலவேல் மஹால் தோழர் கள்.எஸ்.பொன்சேகர், கே.ஆர்.சங்கரன் வளாகத்தில் நடைபெறுகிறது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியைத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தே.முருகன் துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்கக் கொடி யினை அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு, சத்துணவு ஊழியர் சங்கக் கொடியி னைச் சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலை வர் சுந்தரம்மாள் ஆகியோர் ஏற்றி வைத்து மாநாட்டைத் துவக்கி வைத்தனர்.  மாநாட்டிற்குச் சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் சு.செந் தூர்ராஜன் வரவேற்றார். மாதர் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி துவக்க வுரையாற்றினார்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கப் பொதுச் செயலாளர் எம்.பி.முருகையன், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சி.எஸ்.கிறிஸ்டோபர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.பாரி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ச.மயில், ஜாக் டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் கு.வெங்க டேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் துணைப் பொதுச்செயலாளர் என்.வெங்கடேசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். வரவேற்புக்குழு செயலாளர் பி.செல்லத்துரை நன்றி கூறினார்.

பின்னர் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டி ற்கு மாநிலத் தலைவர் சுந்தரம்மாள் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் துவக்க உரை யாற்றினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் அ.நூர்ஜகான், மாநி லப் பொருளாளர் பேய்த்தேவன் ஆகியோர் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.  மாநிலத் துணைத்தலைவர்கள் கே. அண்ணாதுரை, ப.பாண்டி, ஜி.சாவித்திரி, ஆ. அமுதா, ஜெ.சசிகலா, மாநிலத் துணை செய லாளர்கள் ஆ.பெரியசாமி, கு.சக்தி, கே.சுப‌ந்தி, ஆர்.எம்.மஞ்சுளா ஆகியோர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கோரிக்கை தீர்மானங்களை முன்மொழிந்தனர். இது தொடர்பாகச் சத்துணவு ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் நூர்ஜஹான் கூறுகையில், சத்துணவு பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு 38-ஆண்டுகள் ஆகியும் கால முறை ஊதியம் வழங்கப்படவில்லை. குறைந்த பட்சம் குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதி யம் மற்றும் ஒட்டுமொத்தத் தொகையாக அமைப்பாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், சமையல் உதவியாளருக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கித் தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் சங்க மாநாடு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.  இதேபோல் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கூறுகையில், சத்துணவு பணியா ளர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஓய்வு ஊதியம் ஆகியவற்றைத் தமிழக முதல்வர் நிறைவேற்றித் தர வேண்டும் என்றனர்.