ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா மோதல்
இராமநாதபுரம், பிப்.20- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 11 ஆவது மாநில மாநாடு இராமநாதபுரத்தில் பிப்ரவரி 20 அன்று துவங்கியது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் இரத்ததானம் வழங்கி இரத்ததான முகாமை துவங்கி வைத்தார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப்சிங் உடல் தான முகாமை துவக்கி வைத்தார். மாநிலத் துணைத் தலைவர் இரா.ஆறுமுகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக் குழு தலைவர் சா.கணேசமூர்த்தி வரவேற்றுப் பேசினார். முன்னாள் பொதுச் செயலாளர் நா.சேகர் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பா.ரவி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மாநில அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சு.குமரேசன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாநில பொதுச்செயலாளர் ச.பாரி வேலை அறிக்கையையும் மாநிலப்பொருளாளர் மா.விஜய் பாஸ்கர் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். கருத்தரங்கம் கருத்தரங்கத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் மு.சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் ந.திருவேரங்கன் வரவேற்றார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் மண்டல செயலாளர் க.சுவாமிநாதன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநிலச் செயலாளர் ஜ.ஜம்ரூத் நிஷா நன்றி கூறினார்.