ஈரோடு, பிப். 25- தேர்தலுக்காக மட்டுமல்லாமல் நாட்டின் நலன் கருதி நாங்கள் கூட் டணி அமைத்துள்ளோம். ஆனால், எடப் பாடி பழனிச்சாமி அமைத்திருக்கிற கூட் டணி பிரதமர் மோடி பெயரை உச்ச ரித்தால் பயம் என்கிற ரீதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி மோடி பெயரை உச்சரிக்க வில்லை என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டா லின் கிண்டலடித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட் பாளர் இவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு பய ணத்தில் ஈடுபட்ட திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டா லின் சனியன்று மாலை பன்னீர் செல் வம் பூங்கா பெரியார் நகரில் பிரச்சா ரத்தை நிறைவு செய்தார். இந்த பிரச்சார இயக்கத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், குடும்ப தலை விகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப் பதைப் பற்றி காலையில் அறிவித்தோம். அதுபற்றி அதிமுகவினர் தேர்தல் கமி சனில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் தானே என்னாச்சு, என்னாச்சு எனக் கேட்டனர்.
அதற்குத் தானே பதில் சொன்னோம். அது எப்படி தேர்தல் விதி மீறல் ஆகும். இந்த கூட்டணி தேர் தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட கூட்டணி மட்டும் அல்ல. நாட்டிற்காக, கொள்கைக்காகா, லட்சியத்திற்காக, நம் இனம், மொழி, நாடு பாதுகாக்கப் பட வேண்டும் என்பதற்காக கொள்கை அளவில் அமைந்த கூட்டணி. இதை எதிர்த்து ஒரு கூட்டணி இருக்கிறது. அதில் கூட்டணி கட்சி தலைவர்கள் படங்கள் போஸ்டர், பேனர்களில் போடக்கூடாது என்பதுதான் அவர்கள் கூட்டணி. இன்று வரை அவரது வேட் பாளரை ஆதரித்து பேசியபோது எங்கா வது மோடி பெயரை எடப்பாடி பழனிச் சாமி பயன்படுத்தி இருக்கிறாரா! பயம். இனி பயன்படுத்தினாலும், இல்லா விட்டாலும் டெபாசிட் வாங்கப்போவது இல்லை. நாடாளுமன்றத்தில் கூட்டணி அமைத்தோம். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றோம். உள்ளாட்சி அமைப்பு தேர்தலிலும் கூட் டணி தொடர்ந்தது. மிகப்பெரிய வெற் றியைப் பெற்றோம். இந்த இடைத்தேர்த லிலும் கூட்டணி தொடர்கிறது. வரக் கூடிய நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். தேர்தலில் மட்டு மல்ல, கொள்கை அளவிலும் தொடர் கிறது என்று குறிப்பிட்டு பிரச்சார நேரம் முடிவடைய உள்ள இரண்டு நிமிடங்க ளுக்கு முன்னதாக உரையை நிறைவு செய்தார்.