tamilnadu

img

அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்கப்படும்

திருச்சிராப்பள்ளி, டிச.31 - திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.1084 கோடியே 80 லட்சம் மதிப்பிலான திட்ட  பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகள் தொ டக்க விழா வியாழனன்று திருச்சி கேர்  கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவ ராசு வரவேற்புரையாற்றினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட சத்தி ரம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தும் மற்றும் மாவட்டத்தில் ரூ.1084 கோடியே 80 லட்சம் மதிப் பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொ டங்கி வைத்தும், நலத்திட்ட உதவி களை வழங்கியும் சிறப்புரையாற்றி னார். அப்போது அவர் பேசியதாவது: “திருச்சியில் அமைச்சர்கள் கே. என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி 78,152 மனுக்களை பெற்று இருக்கி றார்கள்.

இவை ஆய்வுக்கு உட்படுத் தப்பட்டு 45,088 மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள். இதர மனுக் களை பரிசீலனை செய்து தகுதி உடைய அனைத்து மனுக்களும் நூற்றுக்கு நூறு சதவீதம் நிறை வேற்றித் தரப்படும். தமிழகத்தில் எந்த தனி மனிதனிடமும் கோரிக்கை மனு இல்லை என்ற நிலையை உரு வாக்குவதே இந்த அரசின் லட்சியம்.  நாம் அந்த சூழலை உருவாக்கிட வேண்டும்.  திருச்சி மாநகராட்சியில் விடுபட்ட  பகுதியில் ரூ.210 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், ரூ.200 கோடி யில் பஞ்சப்பூரில் 100 எம்.எல்.டி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக் கப்படுகிறது. துறையூர் நகராட்சியில் ரூ.100 கோடியில் புதிய குடிநீர் திட்டம், மணப்பாறையில் கூட்டு குடிநீர் திட்டத்தை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெறும் திட்ட பணிகளை நானே  அவ்வப்போது வந்து நேரில் ஆய்வு செய்வேன். அதை விரிவுப்படுத்த துரிதப்படுத்துவேன்.  இந்த விழாவில் 44 ஆயிரத்து 645  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அத்தனை பேரும் இங்கு வரவில்லை. இந்த  விழாவிற்கு வந்திருக்கும் பயனாளி களை தவிர்த்து மீதமிருக்கும் பயனா ளிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்குள் வீடு தேடி, மக்கள் பிரதிநிதிகள் அல்லது  அரசு அதிகாரிகள் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள்.  இந்த 6 மாத ஆட்சியில் பல புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந் தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் கள் வேலை வாய்ப்பை பெறுவார் கள். தொழில் வளர்ச்சியில் மிகப்பெ ரிய முன்னேற்றத்தை தமிழகம் அடை யும். கிராமப்புற திட்டங்கள் புதுப்பிக் கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் நன்றி கூறினார்.