tamilnadu

img

சோசலிசமே இந்தியாவிற்கான மாற்று

சோசலிசமே இந்தியாவிற்கான மாற்று[

சங்கரன் கோவில் கருத்தரங்கில் பெ.சண்முகம் முழக்கம்]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி “இந்தி யாவிற்கான மாற்று சோசலிசமே” என்ற தலைப்பில் சங்கரன்கோவி லில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. சிபிஎம் வட்டார செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலை மையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சி யை ஒன்றிய செயலாளர் நட ராஜன் வரவேற்றார்.

தொழில்நுட்ப  வளர்ச்சி மக்களுக்காக இருக்க வேண்டும்

கருத்துரையாற்றிய மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ”உலகம் அறிவியல் தொழில்நுட்ப த்தால் வளர்ச்சி பெற்று வரும் இக்காலகட்டத்தில், அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் பய னுள்ள வகையில் அமைய வேண்டுமே தவிர, ஒரு நாட்டின் பெரு முதலாளிகளின் சுயலாபத் திற்காக செயல்படக் கூடாது. கும்ப மேளா என்ற பெயரில் 60 கோடிக் கும் அதிகமான மக்களை புனித நீராடல் என்ற பெயரில் நீரினை  அசுத்தம் செய்தது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டையும் அசுத்தம் செய்துள்ள இன்றைய ஒன்றிய  பாஜக அரசாங்கம் மனித குலத்தி ற்கு எதிராக, அறிவியலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

வளர்ச்சிக்கு மாறான உண்மை நிலை

“இன்றும் நமது நாட்டில் சாக்கடை ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் எத்தனையோ குடும் பங்கள் வீடுகள் இல்லாத நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக் கின்றன. ஆனால், பிரதமர் மோடி, பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்துவிட்டதாக பொய்யான தகவல்களை கூறி, அதானி, அம்பானி போன்ற முதலாளிக ளுக்கு துணை போய்க் கொண்டி ருக்கிறார்” என்று சாடினார்.

விவசாயிகளிடம் கொள்ளை

உலகில் உள்ள எல்லா உயிர்க ளும் வாழ்வதற்கு உணவு அவசி யம். அத்தகைய உணவை உற்பத்தி செய்ய வேளாண்மை அவசியம். அவ்வாறு உற்பத்தி செய்யும் விவ சாயிகளிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் இன்சூரன்ஸ் என்ற பெயரில் ஒன்றிய, மாநில அரசுக ளின் கையூட்டாக செயல்படும் தனி யார் நிறுவனங்கள் கோடிக் கணக்கான ரூபாயை வசூலித்து லாபம் சம்பாதிக்கின்றன. அதனை இந்த அரசாங்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு களுக்கு மேலாகியும், இன்றும் கட்சிப் பேனர்களை வைத்து வீடு கள் உண்டாக்கி அதில் வசிக்கும் எத்தனையோ குடும்பங்கள் உள்ளன. இருப்பினும், அக் குடும்பங்களுக்கு பட்டா மற்றும் புதைப்பதற்கு சுடுகாடு கூட இல்லாத நிலைதான் நாட்டில் நீடித்து வருகிறது” என்று வேதனை தெரிவித்தார்.

தனியார்மயமாகும் அனைத்துத் துறைகளும்

“நமது நாட்டில் இன்று அனைத்து துறைகளும் தனியார் மயத்தை நோக்கி ஓடிக்கொண்டி ருக்கின்றன. உதாரணமாக, தனி யார் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கே ஒரு லட்சத் திற்கும் மேல் ஆகிறது. பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி யும், இல்லாதவர்களுக்கு ஒரு கல்வியும் என சொந்த நாட்டிற்குள் ளேயே வேறுபாடுகள் நிறைந்த கல்வி அமைப்பைப் பெற்றிருக்கி றோம். கொரோனா காலகட்டத்தில் பல தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் ஈட்டின. நாட்டு மக்களுக்கு ஒரே மாதிரியான மருத்துவம் அளிப்பதில் மோடி தலைமையிலான அரசாங்கம் தோல்வி அடைந்தது நிதர்சன மான உண்மை” என்றார்.

கியூபா, கேரளா வளர்ச்சியை சுட்டிக்காட்டல்

“சோசலிச நாடான கியூபாவில் இன்றளவும் கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப் படுகின்றன. மாணவர்கள் எந்தத் துறையைத் தேர்வு செய் தாலும், எவ்வளவு பெரிய பட்டங்கள் பெற்றாலும் அரசே அதற்கான செலவினங்களை ஏற்றுக்கொள்கிறது. கொரோனா காலகட்டத்தில் பல நாடுகளுக்கு மருத்துவர்களையும், மருந்துக ளையும் இலவசமாக வழங்கிய பெருமை கியூபாவைச் சாரும்” என்று பாராட்டினார். அதே போல,”அண்டை மாநில மான கேரளாவில் வீடுகள் இல்லாத குடும்பங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு 96 சதவீத மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொ டுக்கப்பட்டுள்ளன” என்று கேரளா மாதிரியை முன்னிறுத்தினார்.

“சோசலிசமே தீர்வு”

“இத்தகைய நிலையை இந்தியாவில் மாற்ற வேண்டு மானால், கல்வி, மருத்துவம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு போன்ற அனைத்தும் நமது நாட்டு மக்களுக்கு சரிசம மாக கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு சோசலிசமே சரியான மாற்றாக இருக்க முடியும்” என்று தனது உரையை நிறைவு செய்தார். முன்னதாக கருத்தரங்கத்தை துவக்கி வைத்து கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் பி. உச்சிமாகாளி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்ராஜ் மற்றும் கண்ணன் ஆகி யோரும் பேசினர். இந்த திறந்தவெளி கருத்த ரங்கத்திற்கு சங்கரன்கோவில் வட்டார குழு உறுப்பினர் சி.கே. குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சி யில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர்கள், அனைத்து இடைக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.