மாற்று இடம் வழங்கி விட்டு சாலையோர கடைகளை அப்புறப்படுத்துக சிறுகடை விற்பனையாளர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 7-- எம்.கே.பி.நகர் சென்ட்ரல் அவென்யூ சாலையோர சிறுகடை விற்பனையாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் தலைவர் எம்.எஸ்.மீராமைதீன் தலைமையில் நடைபெற்றது. ஜி.குருசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் சங்க கொடியை ஏற்றி, பேரவையை துவக்கி வைத்து பேசினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் பெயர் பலகையை திறந்து வைத்தார். செயலாளர் எஸ்.அறிவழகன் வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.புஷ்பநாதன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எம்.ராஜ்குமார் வாழ்த்திப் பேசி னார். நகர விற்பனைக் குழு உறுப்பினர் ஜி.மோனிஷா பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக எஸ்.ஜலால்தீன் வரவேற்றார். எம்.தேவி நன்றி கூறினார். தீர்மானங்கள் சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும், அத்தியாவசிய தேவைக்காக சாலையோர கடைகளை அப்புறப்படுத்தும் போது, மாற்று இடம் வழங்கி விட்டு அப்புறப்படுத்த வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், வியாபாரம் செய்யும் அனைவருக்கும் மாநகராட்சி தள்ளு வண்டிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன, புதிய நிர்வாகிகள் தலைவராக எம்.எஸ்.மீரா மைதீன், செயலாளராக எஸ்.அறிவழகன், பொருளாளராக எம்.புஷ்பநாதன் உள்ளிட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.