சென்னை, நவ.18- சென்னை மாதவரத்தில் சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரசு சித்த மருத்துவர் சோ.தில் லைவாணன் மூன்று மருத்துவப் புத்தகங்களை எழுதியுள்ளார். ‘சுகம் தரும் சித்த மருத்துவம், நோய் நாடி சித்த மருத்துவம் நாடி, வேர் பாரு தழை பாரு’என்ற அந்த புத்தகங்க ளின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவ நேயப் பாவாணர் மாவட்ட நூலக அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நூல்களை வெளி யிட்டார். முதல் பிரதிகளை வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் பெற்றுக் கொண்டார். விழாவில் அமைச்சர் பேசுகையில், “தமிழக அரசு நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக திண்டுக் கல்லில் 200 ஏக்கரில் அரசு மூலிகைச் செடிகளை பயிரிடுகிறது. மூலிகைச் செடிகளைப் பயிரிடும் முறைகள் குறித்து அப்பகுதி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது”என்றார். சித்த மருத்துவப் பல்கலைக்கழ கத்திற்கான அலுவல் ரீதியான பணி கள் முடிவடைந்துள்ளன. ரூ.2 கோடி யில் அதற்கான அலுவலகம் கட்டப் பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆளுநர் ஒப்புதல் கிடைத்ததும் சென்னை மாதவரம் பால்பண்ணை யில் 25 ஏக்கரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த விழாவில் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் இரா ஜேந்திரன், எமரால்டு பதிப்பக இயக்கு நர் கோ.ஒளிவண்ணன், புலவர் வே.பது மனார், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் எஸ்.கணேஷ், தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர் மருத்துவர் கு.சிவராமன், நடிகர் பொன் வண்ணன், இம்பாக்ஸ் நிறுவனத் தலைவர் மருத்து வர் அர.கண்ணன், முனைவர் தமிழ். திருமால், சித்தமருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.