tamilnadu

img

தமிழ்நாடு புதிய டிஜிபியாக சங்கர் ஜூவால் நியமனம்

சென்னை, ஜூன் 29- தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜூவால் நியமனம் செய்யப்பட்டுள் ளார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக உள்ள சைலேந் திர பாபுவின் பதவிக் காலம் வெள்ளியன்றுடன் (ஜூன் 30) நிறைவு பெறும் நிலை யில், புதிய டிஜிபியாக சென்னை காவல் ஆணைய ராக இருந்த சங்கர் ஜூவால் நியமிக்கப்பட்டுள்ளார்.  உத்தர்கண்ட் மாநி லத்தைச் சேர்ந்த சங்கர் ஜூவால் 1990-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் சேலம், மதுரை எஸ்.பி., ஒன்றிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப் பிரிவு டிஐஜி, ஐஜி,  சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ஆகிய முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி யவர்.  அயல்பணியாக ஒன்றிய அரசில் 8 ஆண்டுகள் பணி புரிந்த இவர் பிறகு தமிழ்நாடு வந்து அதிரடிப் படை ஐ.ஜி.யாக நியமிக்கப் பட்டார். சிறந்த பணிக்காக 2 முறை குடியரசுத் தலைவ ரின் பதக்கம் பெற்றவர். சங்கர் ஜூவால் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர் நிய மிக்கப்பட்டுள்ளார்.