குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த சட்டமன்ற சிறப்பு அமர்வை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ.ராதிகா, தலைவர் எஸ்.வாலண்டினா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த 13 வயது சிறுமியை ஆசிரியர்கள் 3 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இதனால் கருவுற்ற அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்ததாக வும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இச்சம்பவம் தமிழ்நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் வெளிவந்தவுடன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தை யின் பெற்றோரை சந்தித்து பேசி ஆறு தல் கூறியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கல்வி நிலையங்க ளில் குழந்தைகள் மீதான பாலியல் பலாத் கார சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதை தடுத்து நிறுத்திட கோரி, தமிழக முதல்வருக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் கடிதங்கள் மூலமாகவும் பத்திரிகை செய்திகள் மூலமாகவும் வலி யுறுத்தி வருகிறோம். இச்சம்பவத்தில் மூன்று ஆசிரி யர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆசிரி யர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் காவல்துறை பள்ளியில் துரித விசாரணை நடத்திட வேண்டும். பள்ளி-கல்லூரிகளில் போக்சோ சட்டப் பிரிவுகளை பாடத் திட்டத்தில் இணைத்திட வேண்டும். குழந்தைகள், இளம்பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த பெண்கள், மாண வர்கள், ஆசிரியர்கள் அமைப்பு களோடு பள்ளிக் கல்வித்துறை கலந்து ஆலோசித்து உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து சட்ட மன்றத்தில் சிறப்பு அமர்வை நடத்திட வேண்டும். மேற்கண்ட இச்சம்பவத்தில் குற்ற வாளிகளுக்கு உரிய தண்டனை அளித் திடும் வகையில் காவல்துறையின் செயல் பாடுகள் அமைய வேண்டும். பாதிக்கப் பட்ட குழந்தைக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். இந்தச் சம்பவத்தால் கடும் மன அழுத் தத்திற்கு உள்ளாகியுள்ள குழந்தைக்கு மருத்துவர்கள் மூலமாக ஆற்றுப் படுத்துதல் சிகிச்சை அளித்திட வேண்டும்.
குழந்தையின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப் பட்ட குழந்தைக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, குழந்தையின் கல்வி தொடர்வதற்கான அனைத்து ஏற்பாடு களையும் செய்ய வேண்டும். மேலும் இப்பள்ளியில் வேறு குழந்தைகள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகி உள்ள னரா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகளில் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்தும் விழிப்புணர்வு முகாம் களை ஏற்பாடு செய்ய வேண்டும். வன்கொடுமைகளை தடுத்து நிறுத்து வதற்கு பொதுமக்களைச் சென்றடை யும் வகையில் அரசின் சார்பில் விளம்பரம் செய்யப்பட வேண்டும் என அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளனர்.