tamilnadu

img

ஆன்லைனில் பட்டாசு விற்பனை உள்ளூர் பட்டாசு வியாபாரிகள் கவலை

கோவை, அக்.22 - ஆன்லைனில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை அதிகரிப்பால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை என்றாலே பட் டாசு முதலிடமும், முக்கிய இடமும் பிடிக்கும். கொரோனா அச்சுறுத்தல் கார ணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடு களின் காரணமாக தீபாவளி போன்ற பண்டிகைகள் கடந்த இரண்டு வருடங் களாக பெரிய அளவில் கொண்டாடப் படவில்லை. இந்த ஆண்டு கட்டுப்பாடு கள் இல்லை என்பதால், தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் படும் என எதிர்பார்ப்படுகிறது.  இந்நிலையில், தீபாவளி பண்டிகை யொட்டி குறைந்த நாட்களே வியாபா ரம் என்றாலும் நல்ல மகசூல் என்பதால்  பட்டாசு விற்பனைக்கு போட்டி அதிக மாக இருக்கும். பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க பல கட்டுப்பாடு கள் விதிக்கப்படுகிறது.  குறைந்த எண்ணிக்கையிலேயே கடைகள் வைக்க அனுமதிக்கப் படுகிறது. இதற்கும், தீயணைப்புத் துறை துவங்கி காவல்துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் என  பல்வேறு அரசுத்துறை அலுவலகங்க ளுக்கு ஏறி இறங்கி அனுமதியை வாங்கு கின்றனர். ஓரிரு நாட்களின் வியாபாரத் திற்கு ஒரு மாதத்திற்கும் மேல் அலைந்து  திரிந்து பாட்டாசு கடைகள் அமைக்க அனுமதி பெற்று கடைகள் அமைத் தால், எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற் பனை செய்து இந்த வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கப்படுகிறது.

சிவாகாசிக்கே நேரில் சென்று பட்டாசு வாங்குவர் ஒரு பக்கம் இருக் கும் நிலையில், ஆன்லைன் மூலமாக சிவகாசியில் கிடைக்கும் விலைக்கே தரமான பட்டாசுகளை வாங்க அதிகள வில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இத னால், நடப்பாண்டில், ரூ.200 கோடிக்கு மேல் ஆன்லைன் மூலம் தீபாவளி பட் டாசு விற்பனை இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைன்  பட்டாசு விற்பனையை செய்து வந்த நிலையில், தற்போது 150-க்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஆன்லைன்  பட்டாசு விற்பனையை துவங்கியுள் ளது. தவிர, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங் களின் மூலமாக பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. இந்த ஆன்லைன் வர்த்தகத்தை பயன்படுத்தி சிலர் தரமற்ற பட்டாசுகள் விற்பதும் நடை பெறுகிறது. 

உச்சநீதிமன்றம் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி பட்டாசு விற்பனை நடந்து வருவதா கவும், இது போன்ற விற்பனையால் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் கடை அமைத்து விற்பனைக்கு தயராகி வரும்  உள்ளூர் சிறு பட்டாசு வியாபாரிகள் பாதிக்கபடுவதாக பட்டாசு விற்பனை யாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.  இது குறித்து கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் கூறுகையில், ஆன்லைன் பட்டாசு விற் பனை செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பி னும், விதிமுறை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்கின்றனர். நாங் கள் பட்டாசு கடை அமைக்க லைசென்ஸ்  பெறுவது, பாதுகாப்பு நடவடிக்கை என அரசின் விதிமுறைகளை கடைப் பிடிக்கிறோம். ஆனால், ஆன்லைனில் எவ்வித விதிமுறையும் கடைப்பிடிப்பது இல்லை. இந்த விற்பனை பாதுகாப்பா னதும் இல்லை. அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. இந்த ஆன் லைன் தளத்திற்கு அங்கீகாரம் இல்லை. போலியாக தான் உள்ளது. இதில், பணயிழப்பு நடக்க வாய்ப்பு இருக்கி றது. எனவே, பட்டாசுகளை பொது மக்கள் நேரடியாக கடைகளில் வாங்க  முன்வர வேண்டும். ஆன்லைனில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இது  சிறு பட்டாசு வியாபாரிகளுக்கு பயனுள் ளதாக இருக்கும். ஆன்லைன் விற் பனையை தடுக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.