tamilnadu

சாம்சங் நிறுவனம் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும்

சாம்சங் நிறுவனம் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும்

சாம்சங் நிறுவனம் தொழிலாளர் விரோத  நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும்,  இதற்கான போராட்டத்திற்கு தொழிலாளர் களும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டு மென சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையின் அம்சங்கள் வருமாறு: சாம்சங் நிறுவனம் வன்மத்தோடு தொழிற் சங்க விரோத நடவடிக்கைகளைத் தொடரு கிறது. 38 நாட்கள் வேலை நிறுத்தத்திற்குப் பிறகும், உயர் நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகும் தான் “சாம்சங் இந்திய தொழிலாளர் சங்கம்” பதிவு செய்யப்பட்டது. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பிய  பின்னர் முதல் நாளில் இருந்தே தொழிற்சங்கத் தைவிட்டு விலக வேண்டும். வெளித் தலைமை யையும் சட்டப்படியாக பதிவு செய்த சங்கத்தை யும் நிறுவனம் ஏற்காது என்று தொழிலாளர் களை எச்சரித்து மிரட்ட ஆரம்பித்தது. எந்த சட்ட அங்கீகாரமும் இல்லாத ஒரு குழுவை தொழிற்சாலைக்குள் வைத்துக் கொள்ள மட்டும்தான் அனுமதிக்கும் என்று நிர்வாகம் கூறியது. நிர்வாகமே பின்னால் இருந்து தனக்கு  வேண்டிய சிலரைக் கொண்டு ஒரு கமிட்டியை அமைத்து, அதற்கு எல்லா வகையிலும் ஊக்க மும் உதவியும் கொடுத்து வருகிறது.  கமிட்டியை ஏற்றுக் கொண்டு கையெ ழுத்துப் போட்டால் மூன்று லட்சம் ரூபாய் வட்டி யில்லாக் கடன் வழங்கப்படும் என்பது போன்ற  பல சலுகைகளை அறிவித்தார்கள். துறைவிட்டு  துறைக்கு இடமாற்றம் செய்து கமிட்டியில் கை யெழுத்துப் போட அழுத்தம் கொடுத்தார்கள். விடுப்பு கேட்டு, மருத்துவ உதவி, காப்பீட்டு உதவி கேட்டு விண்ணப்பித்தால் கமிட்டியில் கை யெழுத்துப் போட வேண்டும் என்று நிர்ப்பந்தம்  செய்யப்பட்டது. இவையெல்லாம் தொழிற்தகராறு  சட்டப்படி தொழிலாளர் விரோத நடவடிக்கை யாகும் (unfair Labour Practice). இதன்  மீதான புகார்களை கடந்த மூன்று மாதத்திற்கு முன்பே தொழிலாளர் துறையில் சமர்ப்பித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. கேஷுவல் தொழிலாளர்களை பயிற்று விக்குமாறு, தொழிலாளர்களை நிறுவனம்   கட்டாயப்படுத்தியது. ஒப்பந்தத் தொழிலாளர் களை உற்பத்தியில் ஈடுபடுத்தியது. இவை யெல்லாமே அப்பட்டமான சட்ட மீறல்களாகும். ஆனால் அடுக்கடுக்காக புகார்கள் செய்த பின்பும் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகா தாரத் துறை மவுனம் காக்கிறது.  இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. இந்த நிலையில் தொழிலாளர்கள், நிறுவனத்தின் உயரதிகாரியை (கொரியாவைச் சார்ந்தவர்) சந்திக்க அனுமதிக் கோரினர். இதற்கு இந்தியாவில் உள்ள சாம்சங் மனித  வள அதிகாரிகள் குறுக்கே நின்று தடுத்த  வண்ணம் உள்ளனர். 31.1.2025 அன்று மதிய உணவு இடைவேளையில் உயரதிகாரியை சந்திக்க வேண்டும் என்று கூட்டாக முறையிட சென்றதுதான் குற்றம் என்று, இதுவரை 23  தொழிலாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது நிர்வாகம். பதிவு செய்யப்பட்ட சங்கம்தான் நிர்வாகத் திற்கு இருக்கிற ஒரே பிரச்சனை. இதில் தொழிற் சங்கம் சமரசம் செய்து கொள்வதற்கு எதுவும் இல்லை.

மூன்று சங்க நிர்வாகிகளை இடைநீக்கம் செய்து பழிவாங்கல் நடவடிக்கையிலும், இதர  தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை யிலும் ஈடுபட்டதை எதிர்த்து 5.2.2025 முதல்  உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடைபெறு கிறது. தொழிலாளர் துறை கூறிய ஆலோச னையையும், அறிவுரையையும் சங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் நிறுவனம் எதையும்  ஏற்காமல் தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக் கையில் ஈடுபடுகிறது. இதுவரை சங்க நிர்வாகி களை இடைநீக்கம் செய்த வண்ணம் உள்ளது; இவையனைத்தும் கண்டனத்திற்குரியவை. தொழிலாளர் துறையும், தொழிற்சாலை கள் துறையும், அரசும் சங்கத்தை ரத்து செய்ய வும், சங்கத்திற்கு எதிராக போட்டி அமைப்பை உருவாக்கி ஊக்குவிக்கும் நடவடிக்கையை நிறுத்தவும், சிறுபான்மை அமைப்போடு 18(1)  ஒப்பந்தம் போட்டு, மற்றவர்கள் மேல் திணிக்கிற  நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிஐடியு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது. தொழிற்சங்க உரிமைக்கான இந்த நியாயமான போராட்டத்திற்கு பேராதரவு தருமாறு தொழிலாளர்களையும் பொது மக்களையும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர்

தெரிவித்துள்ளார்.