மதுரை, ஆக.23- மதுரை கோட்டத்தில் உள்ள 27 ரயில் நிலையங்களில் பிரபல உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனைக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன்படி, மதுரை ரயில்நிலையத் தில் 33 சுங்குடி சேலை உற்பத்தியாளர் கள் தலா 15 நாட்கள் தொடர்ந்து சுங்குடி சேலைகள் விற்பனை செய்து சாதனை வருமான அளவாக ரூ.81,91,847 ஈட்டியுள்ளனர். இதேபோல், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பத்தமடை பாய் ரூ.28,23,071, தூத்துக்குடியில் மக்ரூன் ரூ.23,56,270, திருச்செந்தூரில் பனை பொருட்கள் ரூ.23,35,405, கோவில் பட்டியில் கடலை மிட்டாய் ரூ.15,43,975, திண்டுக்கல்லில் சின்னாளப் பட்டி கைத்தறி சேலை ரூ.12,24,297, திரு வில்லிபுத்தூரில் பால்கோவா ரூ.5,97,655, தென்காசியில் மூங்கில் மர வீட்டு உபயோகப் பொருட்கள் ரூ.5,79,210, இராமநாதபுரத்தில் கரு வாடு ரூ.5,34,650, இராமேஸ்வரத்தில் கடல் பாசி பொருட்கள் ரூ.3,67,201, மணப்பாறையில் முறுக்கு ரூ.3,55,010, மண்டபத்தில் வெட்டிவேர் பொருட்கள் ரூ.3,00,575, காரைக்குடி யில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள் ரூ.3,00,429, சாத்தூரில் சேவு ரூ.2,97,640 என விற்பனையில் உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர்.
மேலும் கொட்டாரக்கரா மற்றும் புனலூரில் தேங்காய் எண்ணெய், மசாலா பொருட்கள், விருதுநகரில் சேவு, அம்பாசமுத்திரத்தில் குழந்தைகளுக்கான மர விளையாட்டு பொருட்கள், பழனியில் பஞ்சாமிர்தம், சிவகங்கையில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள், கொடைக்கானல் ரோட்டில் கொடைக்கானல் மலை சார்ந்த உற்பத்தி பொருட்கள், இராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், பரமக்குடியில் விவசாய விளைபொருட்கள், வாஞ்சி மணி யாச்சியில் மக்ரூன், மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள், சிவகாசி யில் பேப்பர் சார்ந்த தயாரிப்புகள் விற்பனை நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய விரும்புபவர்கள் கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையர் அல்லது கைத்தறி வளர்ச்சி ஆணை யர் அல்லது ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்பது அல்லது பழங்குடி கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு, தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், காதி கிராம தொழில் ஆணையம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்த கைவினை ஞர்கள், நெசவாளர்கள் அல்லது சுய உதவி குழுக்கள் அல்லது சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும்.
இதற்காக விருப்பமுள்ள தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோரிடம் இருந்து விருப்ப விண் ணப்பம் பெறப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட தேர்வு குழு, குலுக்கள் முறையில் விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் ரயில் நிலையத்தில் 15 நாட் களுக்கு தங்களது உற்பத்தி பொருட் களை விற்பனை செய்து கொள்ள லாம். இது உள்ளூர் சிறு, குறு உற்பத்தி யாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்து ம்வகையில் ரயில் நிலையங்களில் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கூடுதல் வரு மானம் பெற வாய்ப்பாக அமைகிறது. உற்பத்தியாளர்கள் விண்ணப் பத்துடன் ரூ.1000 பதிவு கட்டணம் மட்டும் ரயில்வே துறைக்கு செலுத்தி னால் போதுமானது. சிறிய ரயில் நிலை யங்களில் பயணிகள் பயன்பாட்டி ற்கேற்ப பதிவு கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.