tamilnadu

img

தியாக தீபங்கள் குமார் -ஆனந்தன்

தோழர்கள் குமார் - ஆனந்தன் என்ற மாவீரர்கள். மக்கள் வாழ்வின் உன்னதத்திற்காக கடலூர் மண்  ணில் விதைக்கப்பட்ட வீரிய விதைகள்.  இருளர் சமூகத்தில் படித்து முன்னுக்கு வந்த முதல் தலைமுறை இளைஞன் குமார், காவல்துறையில் வேலை கிடைத்து சாதி சான்றிதழ் கிடைக்காமல் காத்திருந்தான். ஆனந்தன் சிறுவயதில் தந்தையை இழந்து பள்ளி படிக்கும் பருவத்தில் வேலைக்குச் செல்லும் நிலையில் வளர்ந்த இளைஞன். இந்த இரு இளைஞர்களும் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் நற்பணி மன்றத் தில் பல சமூகச் சேவைகளை செய்து வந்த னர். அப்போது அவர்களுக்கு அறிமுக மான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அவர்களைத் தனது நடவடிக்கையால், போராட்ட குணத்தால் ஈர்த்தது.

கெடிலம் ஆற்றின் கரையில், புதுப் பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் எல்லையை மீறி ஓடத்துவங்கியது. பெண் கள் மாலை வேளையில் வெளியே வரவே அஞ்சினர். வாலிபர் சங்கத் தோழர்கள் காவல்துறையினருக்கு மனுகொடுக்கத் துவங்கினர். காவல்துறை வாரா வாரம் ஒப்பந்தம் போட்டு மாமூல் பெறுவதால் அக்  கடைகளை அப்புறப்படுத்துவதுபோல் நடிப்பார்கள். பிறகு மீண்டும் கடைகள் இயங்கத்துவங்கும்.  மீண்டும்  மனு, மீண்டும் காவல்துறை நாடகம் என தொடர்ந்தது. ஒருகட்டத்தில் வாலிபர் சங்கத்தின் தொடர் இயக்கத்தால், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தலையீட்டால் கள்ளச்சாராய கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டனர். சில மாதங்கள் அவர்களால் கடைகளை நடத்த முடிய வில்லை. கடைகள் மூட காரணமாக இருந்த  வாலிபர் சங்கதோழர்கள் மீது கள்ளச் சாராய வியாபாரிகள் வன்மத்துடன் திரிந்த னர்.  ஆளும் கட்சி பிரமுகர்கள், காவல்துறை கரும் புள்ளிகள், கள்ளச்சாராய வியாபாரி கள் என்ற முக்கோணக் கூட்டு ஒன்றாய்  நின்றதால் உத்வேகம் பெற்ற சமூகவிரோதி கள் கூட்டம் 1999 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று இரவு வெட்டி வீழ்த்தப்பட்டனர். வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து மட்டுமல்ல, சாதிய கலவரங்க ளுக்கு எதிராக மட்டுமல்ல, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் மட்டுமல்ல, போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான குமார் - ஆனந் தன்கள் போராடி வருகின்றனர்.

- பெரணமல்லூர் சேகரன்