திருப்பூர் மாநகராட்சி, பல்லடம் சாலை, வீரபாண்டி பிரிவில் திங்களன்று நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். அவருக்கு திமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், ஊழியர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.