tamilnadu

img

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் எஸ்.சிவசுப்பிரமணியம் பணி நிறைவு பாராட்டு விழா

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் எஸ்.சிவசுப்பிரமணியம் பணி நிறைவு பாராட்டு விழா

சென்னை, மே 3 - தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பின் பொருளாளர் எஸ்.சிவசுப்பிரமணியம் பணி நிறைவு பாராட்டு விழா சனிக்கிழமையன்று (மே  3) ராயப்பேட்டையில் நடைபெற்றது. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1 இந்நிகழ்வை நடத்தி யது.

தகவல் வங்கி

இந்நிகழ்வில் பேசிய தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், “தொழிற்சங்கத்தில் முன்னணி ஊழியர்களை உருவாக் குவது முக்கியமான பணி. முன்னணி ஊழியர்கள்தான் தொழிற்சங்கத்தை தாங்கி நிற்கிறார்கள். ஆரவார மில்லாமல் பணி செய்து கொண்டு, பின் வரிசையில் நின்று, முன்வரிசை யில் உள்ள தலைவர்களை இயக்கும் பணியை செய்தவர் எஸ்.சிவசுப்பிர மணியன்” என்றார்.

தொழிற்சங்கங்களுக்கு தடை

அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் (ஏஐஐஇஏ) பொதுச் செய லாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா பேசுகையில், “மே 20ந் தேதி தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் உழைப்பாளி மக்கள் சாதி, மத வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும். மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற பாஜக விற்கு ராமர் கோவில் தேவைப்பட்டது. மக்களை அரசியல் ரீதியாக திரட்டவே அவர்களுக்கு கடவுள் தேவைப்படு கிறார். அரியானா, பஞ்சாப், சண்டிகர் பகுதி களில் தேர்தல் நடைபெற்றால் அங்கு ராமர் தேவைப்படமாட்டார். வாக்கு சேக ரிக்க பாபா ராம் ரஹீம் தேவைப்படு வார். குஜராத்தில் தேர்தல் நடந்தால் அங்கு இவர்கள் இரண்டு பேரும் தேவை ப்பட மாட்டார்கள். அங்கு ஆசாராம் பாபா தேவைப்படுகிறார்” என்றார். “மத ரீதியாக மக்களை திரட்டும் பாஜக-வின் சித்தாந்த ஏற்பாடுகள் உழைப்பாளி மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று திரள்வதை தடுக்கிறது.  இது போன்ற சவால்கள் தொழிற்சங்கங் களுக்கு மிகப்பெரிய தடையாக இருக்கி றது. இது இந்தியாவில் உள்ள தொழி லாளி வர்க்க இயக்கத்திற்கு மட்டு மல்ல,  உலகம் முழுவதும் உள்ள உழை ப்பாளி வர்க்க இயக்கம் சந்திக்கும் சவா லாகும். எல்ஐசி-யின் பங்குகளை தனி யாருக்கு விற்பதில் ஒன்றிய அரசு மிக தீவிரமாக உள்ளது. காப்பீட்டு திருத்த மசோதாவை வரவிருக்கிற மழைக் கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. குறைந்த பட்சம் ஒரு பொது காப்பீட்டு நிறு வனத்தையாவது தனியார்மயமாக்க முயற்சிக்கிறது. காப்பீட்டு துறையில் 100 விழுக் காடு நேரடி அந்நிய முதலீட்டை அனு மதிக்க ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்தியா, ஜனநாயகத்தின் தாய் என்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கூறுவார். ஆனால் ஒன்றிய அரசின் செயல்பாடு கள் அனைத்தும் அந்த தாய்க்கு எதி ராக தான் உள்ளது” என்றும் கூறி னார். சென்னை கோட்டம்-1ன் தலைவர் கே.கிரிதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏஐஐஇஏ தலைவர் வி.ரமேஷ், துணைத்தலைவர் ஜி.ஆனந்த், கூட்டமைப்பின் தலைவர்  பி.பி.கிருஷ்ணன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சென்னை பகுதி-1ன் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ் குமார், இணைச் செயலாளர்கள் கே.விஜய லட்சுமி, துணைத்தலைவர் எஸ்.ரவிக் குமார்  ஆகியோர் எஸ். சிவசுப்பிரமணி யத்தின் தொழிற்சங்க பணி, அரசியல் பணியை பாராட்டி பேசினர். இறுதியாக ஏற்புரையாற்றிய எஸ்.சிவசுப்பிரமணியம் சங்கத்தின் சென்னை கோட்டம்-1 மற்றும் சிபிஎம் மத்தியசென்னை மாவட்டக் குழு விற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், இன்சூரன்ஸ் ஒர்க்கர்ஸ் இதழ், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஐசிஇயு- மதுரை கோட்டம், சிபிஎம் தென்சென்னை மாவட்டக்குழு ஆகிய வற்றிற்கு தலா 50ஆயிரம் ரூபாயும் நன்கொடையாக எஸ்.சிவசுப்பிர மணியம் வழங்கினார்.