tamilnadu

img

ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மூன்று சக்கர ஆட்டோ பேரணி மற்றும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்ட நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் ஜெயங்கொண்டம் நகரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்று ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் நிலையம் முன்பு தொடங்கி, அண்ணாசிலை வழியாகச் சென்று ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் முடிவடைந்தது. 
இதனைத் தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகர சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், வேன் ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன், கூட்டத்திற்கு தலைமை தாங்கி சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விபத்து நேரத்தில் மக்களுக்கு உதவிய, தங்களது வாகனத்தில் தவறவிட்ட பொருட்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த வாகன ஓட்டுனர்களை பாராட்டி அவர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். 
மேலும், காவல் உதவி செயலி குறித்து, வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.