tamilnadu

img

சத்தமின்றி மூடப்படும் மாநகராட்சி பள்ளிகள்!

சென்னை, ஆக. 19- சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் துவக்கப் பள்ளி 200, நடுநிலைப் பள்ளி 139, மேல் நிலைப் பள்ளி 35, உயர்நிலைப் பள்ளி 46 என மொத்தம் 420  பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.   இந்நிலையில் நடப்பு கல்வி யாண்டில் மாணவர்களின் எண்ணிக் கையை காரணம் காட்டி பள்ளி களை மூடும் நடவடிக்கையில் மாநக ராட்சி கல்வித்துறை ஈடுபட்டு வரு கிறது. முதல் கட்டமாக பெரம்பூர் ரங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி,  தண்டையார்பேட்டை அப்பாசாமி லேனில் உள்ள சென்னை நடுநிலை ப்பள்ளி, அயனாவரம் வசந்தா கார்ட னில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி,  பெரம்பூர் ஸ்கூல் சாலை யில் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளி, முகப்பேர் மேற்கு செக்டார் 5,இல் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளி, அண்ணாநகர் மேற்கில் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளி, முகப்பேர் மேற்கு செக்டார் 7இல் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளி ஆகிய 7 பள்ளிகள் மூடப்பட்டுள் ளன. இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு கட்டாய  நிர்வாக மாறுதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் உதவிக் கல்வி அலுவலர் களை வைத்து கூட்டம் நடத்தி, வரும் கல்வியாண்டில் பள்ளிகள் மூடப் படுவதாக அறிவித்துள்ளனர். அந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும் பாலான பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த கூட்டத்திற்கு செல்லாத பெற்றோர் கள் ஜூன் மாதம் பள்ளி தொடங்கி யதும் குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பினர். தினசரி பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிய பெற்றோர்கள் அங்கு ஆசிரியர் இல்லாமல் எந்த கற்றல்  கற்பித்தல் பணியும் நடைபெறா ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த னர். அயனாவரம் வசந்தா கார்டன் நடுநிலைப் பள்ளியில் மட்டும் மாறு தல் சான்றிதழ் வழங்க ஓரு ஆசிரி யர் மட்டும் இருக்கிறார். தரமணியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் 900 மாணவர்கள் பயில்கின்றனர். திடீரென நிர்வாகக் காரணம் எனக் கூறி தலைமை யாசிரியரை இடமாற்றம் செய்துள் ளனர். திருவல்லிக்கேணி பங்காரு தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 50 மாணவர்கள் பயில் கின்றனர். இங்கு ஒரு தலைமை யாசிரியர், ஒரு ஆசிரியர் பணி புரிகின்றனர். அண்மையில் மாண வர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்வதாக அதிகாரிகள் தெரி வித்தபோது அதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறைவாக வழங்கப்படும் காலை உணவு

மணலியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் 430 மாணவர்கள் பயில் கின்றனர். இங்கு காலை உணவு குறைத்து வழங்கப்படுவதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த ஆசிரியரை எர்ணாவூர் தாழங்குப்பத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த ஆசியருக்கு ஊதியத்தை நிறுத்தி வைத்து காலதாமதமாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது. ஒரு ஆசிரியர் கல்வியாண்டு தொடங்கிய பின் ஓய்வு பெறும் வயதை எட்டினால், அவருக்கு அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு செய்யப்படும் என அரசாணை உள்ளது. ஆனால் சமீபகாலமாக பணி நீட்டிப்பு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அருகாமைப் பள்ளி அவசியம் என கல்வியாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இருக்கும் பள்ளி களை மாணவர்களின் எண்ணிக் கையை காரணம் காட்டி மூடுவது பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளிகளை மூடுவதால் மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் மாணவர்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சத்த மில்லாமல் பள்ளிகள் மூடப்படுவது ஏற்புடையதல்ல. பள்ளிகளை மூடு வதற்கு பதில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தேவை யான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கை யாக உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன் கூறுகையில், 2011 முதல் 2016 வரை சைதை துரைசாமி மேயராக இருந்த போது இதே போன்ற நட வடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிபிஎம் சார்பில் மாநக ராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தி யதைத் தொடர்ந்து மாநகராட்சி பள்ளிகள் மூடும் நடவடிக்கையை கைவிட்டனர். சாதாரண ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் மாநகராட்சி பள்ளியை நம்பி உள்ளனர்.  எனவே பள்ளிகள் மூடும் நடவடிக்கையை மாநகராட்சி உடனடியாக கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.