tamilnadu

img

அதிமுகவின் அலுவலகத்தில் அடிதடி-மோதல்

சென்னை, ஜூன் 18- அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக வெடித்த உட்கட்சிப்பூசல் அடிதடி வரை சென்றதோடு, சென் சென்னை ராயப்பேட்டை தலைமை  அலுவலகத்தில் நடந்த தாக்குதல்  சம்பத்தில் ஒருவர் ரத்தகாயமடைந் தார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் திடீரென ஒற்றைத்  தலைமை கோரிக்கை எழுப்பப்பட் டுள்ளது. இதனால் ஓபிஎஸ் - இபிஎஸ்  இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட் டுள்ளது. இரண்டு தலைவர்களும் சனிக்கிழமையன்று (ஜூன் 18) தங்களது ஆதரவாளர்களுடன் தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், சென்னை, கிரீன் வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, முக்கூர்  சுப்பிரமணியம், மூத்த தலைவர் தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆலோ சனையில் ஈடுபட்டனர்.

அதே போல், துணை ஒருங் கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் கொறடா ராஜேந்திரனுடன் ஓ. பன்னீர் செல்வம்  ஆலோசனை நடத்தினார். இதனைத்  தொடர்ந்து, பொதுக்குழு தீர்மானக் குழுவுடன் ஆலோசனை நடத்துவ தற்காக ஓ.பன்னீர் செல்வம் ராயப் பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். மறுபுறம், எடப்பாடி ஆதரவாள ரான முன்னாள் அமைச்சர் ஜெயக் குமார் அங்கு வந்தபோது அவருக்கு  ஆதரவாகவும், எதிராகவும் தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதற் கிடையில், ஒற்றைத் தலைமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரு டன் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத் தில் ஆலோசனை நடத்தினார். தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரு டன் வந்த ஈபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக பெரம்பூர் பகுதி செயலாளரு மான மாரிமுத்து மீது தாக்குதல் நடந்தது. இரண்டு தரப்பு ஆதரவா ளர்களும் கைகலப்பில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கி ருந்த ஊடங்கங்களை சேர்ந்த கேமரா மேன்கள் வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரத்திற்குள், அதிமுக  நிர்வாகி மாரிமுத்து ரத்தக் கறையு டன் தலைமை அலுவலகத்தில் இருந்து  இரத்த கரையுடன் வெளியே  வந்து தன்னை ஓ.பன்னீர் செல்வம்  ஆதரவாளர்கள் அடித்து வெளி யேற்றி விட்டதாக கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றும் முறையிட்டுள்ளார். இதனால் அதிமுக அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.